Wednesday, September 30, 2015

அருள் தரும் அழகம்மை  உடனாய வைத்யநாதர் திருகோயில் --வளத்தாஞ்சேரி --ஸ்ரீபெரும்புதூர் 


அன்பர்களே, ரிஷிகளாலும் , முனிவர்களாலும் தேவர்களாலும்  வழிபட பெற்ற உருவாக்கப்பட்ட திருமேனிகள் நமக்கு கிடைக்குமாயின் ,அதை விட பெரும்பேறு வேறென்ன இருக்கிறது ? பாக்கியம் என்ன உள்ளது?

அப்படிப்பட்ட திருமால், பிரம்மனாலும் , சூர்ய சந்திரர்களாலும்,  தேவாரமூவராலும் வழிபடபெற்ற பெருமான் நமக்காக, நம்மை  கடைதேற்றுவதற்காக ,நமக்கு கிடைத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம்,ஸ்ரீபெரும்புதூர் வட்டம் போந்தூர் அஞ்சல், வளத்தாஞ்சேரி என்ற கிராமத்தில்.

சென்னையை சேர்ந்த அடியார் ,  வாருங்கள் புனித யாத்திரைக்கு  அமைப்பாளர் சிவத்திரு சிவதில்லை அவர்களால் இறைவன்
திருக்குறிப்பு உணர்த்தியதன் பேரில் வைத்யநாதர்  என பெயரிடப்பட்டு , அருளாளர் சிவத்திரு ஒளிஅரசு ஐய்யா அவர்களால் தெய்வ தமிழ் வேதங்கள் ஓத,வேள்விகள் முழங்க, நன்னீராட்டு விழாவுடன், நித்திய பூசை வழிபாடுகள் இனிதே துவங்கி வைக்கப்பட்டது.

அன்பர்களே..... 
இனி நாம் செய்ய வேண்டியது  ஒன்று தான்...
நமக்காக பூமியை பிளந்து தோன்றியுள்ள பெருமானை நாம் திரளாக சென்று 
வணங்குவோம்... நோய் நொடியின்றி வாழ்வோம்....வாருங்கள்....


மேலும் இத்திருகோயிலை பற்றிய விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்:9444 500309, 9962415413

3 comments: