Monday, September 7, 2015

பெரும் புகழோடு விளங்கிய பெரும்புகளூர் ---ஒரு காலத்தில்




அழிவின் பிடியில் அகஸ்தீஸ்வரர் ஆலயம்.

திருவாரூர் குடந்தை சாலையில் 2 km இல் இருக்கும் கிராமம் பெரும்புகளூர்.
இங்கு ஒருகாலத்தில் பெரும் புகழோடு இருந்த ஆலயம் அபிராமி அம்மை உடனாய அகஸ்தீஸ்வரர் ஆலயம்.

இன்றோ ஒரு சில செங்கற்களே எஞ்சியுள்ள நிலையில் இறை வடிவங்கள் ஒரு சிறிய அஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட கூரையில் அருள்பாலிகின்றனர்.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பூசை அறவே நின்று போன இந்த ஆலயத்தில் அன்பர் மாரிமுத்து அவர்கள் தினமும் தற்போது 12 ஆண்டுகளாக ஒரு கால பூசை செய்து வருகிறார்.

கோயிலுகென்று ஏராளாமான நிலங்கள் இருந்தபோதிலும் அவைகள் எல்லாம் தற்போது ஆக்ரமிப்பின் 
பிடியில் சிக்கியுள்ளன.

அரசின் உதவி மற்றும் சிவனேய செல்வர்களின் வழிகாட்டுதலை எதிர்பார்த்து கிராம மக்கள் காத்திருக்கிறார்கள். 
contact: Mari Muthu :99431 30863

No comments:

Post a Comment