Sunday, September 13, 2015

மங்காத புகழ் சேர்ப்பார் புகழ்பரணீஸ்வர பெருமான்-கண் கொடுத்த வணிதம் 


அன்பர்களே , திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி வட்டம், கமலாபுரம் செல்லும் வழியில் உள்ளது கண் கொடுத்த வணிதம்.

இங்குள்ள மிக புராதனமான திருகோயில் ஒன்றில் குடிகொண்டுள்ளார் நயன வரதேஸ்வர சுவாமி .

தன்னை நாடி வருபவர்களுக்கு மங்காத கண் ஒளி வழங்குகிறார் இவர்.

திருகோயில் மிக சிதிலமடைந்ததை  ஒட்டி, மெய்யன்பர்களால் திருகோயில் திருப்பணி செய்யப்பட்டு தற்போது ஆலயம் மிக சிறப்பாக தூய்மையாக விளங்கி வருகிறது.

இங்கு கோயில் கொண்டுள்ள புகழ் பரணீஸ்வர பெருமானை வணங்கி  விட்டு தான் போருக்கு செல்வார்கள் இப்பகுதியை ஆண்ட சோழ  மன்னர்கள் .

சோழ சாம்ராஜ்ஜியம் பெருமளவு விரிவு அடைந்ததற்கு, பெரும் புகழோடு விளங்கியதற்கும் இப்பெருமானின் அனுக்ரஹமே காரணம்.

நாமும் சென்று சேவிப்போம். புகழோடு வாழ்வோம் .



No comments:

Post a Comment