Wednesday, September 26, 2018

அன்று ....! மிக பிரம்மாண்டமான திருக்கோயில் !
இன்று.....! ஆசியாவின் மிக பெரிய கல்லறை !

ஆம்! அன்பர்களே ! எங்கே இந்த அவல நிலை? என்று தானே கேட்கிறீர்கள் ?

நம் சிங்கார சென்னையிலே தான் !

இப்படி ஒரு திருக்கோயில் இருப்பதே நம் சென்னை வாசிகள் 99% பேருக்கு தெரியாது ..மாற்று மதத்தவரின் பூத உடல்களுக்கு இங்கே அடைக்கலம் அளித்து விட்டு அடைக்கல நாதேஸ்வரர் என்ற மிக பொருத்தமான பெயருடன் இக்கல்லறையின் எதிரே அமைந்துள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் திருக்கோயிலின் உள் ஒரு சிறிய இடத்தில் அமர்ந்து, அபயம் என்று தன்னை நாடி வருபவர்களுக்கு அடைக்கலம் தந்து அருள்கிறார் அழகாம்பிகை சமேத ஸ்ரீ அடைக்கல நாதேஸ்வரர் ....

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கீழ்ப்பாக்கம் தோட்டம் சாலையில் மிகப்பெரிய கல்லறை தோட்டத்திற்கு நேர் எதிரே இத்திருக்கோயில் அமைந்துள்ளது ...

ஏன் இந்த நிலை ஏற்பட்டது?

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலத்திலேயே , இரண்டு மிக பெரிய பிரகாரங்கள் , ராஜகோபுரம் என குடியிருந்த இப்பெருமானின் திருக்கோயில் கவனிப்பாரின்றி சிதிலமடைய துவங்கியிருந்தது ... 
மிகப்பெரிய கல்லறை தோட்டம் அமைக்க இடம் தேவைப்பட்ட அந்த நேரத்தில் சிதிலமடைந்த இத்திருக்கோயில் அவர்கள் கண்ணை உறுத்தவே , வந்தது இப்பெருமானுக்கு சோதனை !!!!!

அரன் திருக்கோயில் இடிக்கப்பட்டது . மிகப்பெரிய கல்லறை தோட்டம் கட்டப்பட்டது ....

இதுவே இவரின் வரலாறு ....பின்னர் ஆன்மீக அன்பர்கள் பலரது முயற்சியால் எதிரே உள்ள தர்மராஜா கோவிலில் இவருக்கு ஒரு சிறிய தனி கோயில் அமைக்கப்பட்டது ..

அன்பர்களே இன்று கருவறையில் ஒளி பொருந்திய கம்பீரமான திருமேனியராய் திகழும் இவரை தரிசித்த மாத்திரத்திலேயே நம் துன்பங்கள் பறந்தோடி விட்ட உணர்வு மேலிடுகிறது .....

இத்திருக்கோயில் நவகிரகங்கள் தத்தம் மனைவியரை மடியில் அமர்த்தி அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கின்றனர் .

யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேண்டுமல்லவா? சென்று தரிசியுங்கள் ! இப்பெருமானின் அருளை நீங்களே உணர்வீர்கள் !!

குறிப்பு: இப்பெருமானை இரும்பு கதவின் இடைவெளியில் எப்போதும் காணலாம் 

Saturday, September 15, 2018

சித்தத்தை சிவன் பால் வைத்த அடியார் பெருமக்களுக்கும் , உழவார பணி மன்றத்தினருக்கும் உடனடி கவன ஈர்ப்பு பதிவு இது 

அன்பர்களே ....தாமிரபரணி புஷ்கரணி கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில் புனித தீர்ததங்களை நாம் எவ்வாறு வைத்திருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும் .....நம் நாட்டில் உள்ள தீர்த்தங்களையும் , திருக்கோயில் குளங்களையும் முறையாக பராமரித்தாலே போதும் .....தண்ணீருக்காகஅண்டை அயல் மாநிலங்களை நாம் கெஞ்சி கொண்டிருக்க வேண்டியதில்லை.

நகரங்களில் புனிதமான காஞ்சி மாநகரில் நடுநாயகமாக அமைந்து பெருமை சேர்ப்பது சர்வ தீர்த்த குளம் .....இத்திருக்குளத்தின் பெருமை சொல்லில் அடங்காது ...சிவபெருமானின்  ஆணைக்கிணங்க கங்கை காவேரி உள்ளிட்ட அனைத்து புனித நதிகளும் இத்திருக்குளத்தில் அடக்கம் ......அதோடு இந்த நதிகள் தீர்த்தேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் ஒன்றை நிறுவி பூசித்து பேறு பெற்றதாக கஞ்சி புராணம் கூறுகிறது ...

இங்கு பிதுர் கடன்கள் நிறைவேற்றுவதால் , நம் முன்னோர்கள் மிகுந்த திருப்த்தி அடைகின்றனர் ..இன்றும் மக்களால் இங்கு பிதுர் கடன்கள் செய்யப்படுகிறது .

அதோடு இத்தீர்த்தகுளத்தின் 4 கரைகளிலும் ஏராளமான புராதன திருக்கோயில்கள் அமைந்து காஞ்சி நகருக்கு பெருமை சேர்க்கின்றன ...

மேற்கு கரையில் :
அருள்மிகு காசி விஸ்வநாதர் 
அருள்மிகு காமேஸ்வரர் 
அருள்மிகு இரண்யேஸ்வரர் 
அருள்மிகு தீர்த்தேஸ்வரர் 

வடக்கு கரையில் 
அருள்மிகு லகு லீஸ்வரர் என்கிற தவளேஸ்வரர் திருக்கோயில் 

கிழக்கு கரையில் 
அருள்மிகு கங்காதேஸ்வரர் 
அருள்மிகு அனுமந்தேஸ்வரர் 

தெற்கு கரையில் 

அருள்மிகு மல்லிகார்ஜுனர் 
அருள்மிகு சீதேஸ்வரர் 
அருள்மிகு லக்க்ஷுமனேஸ்வரர் திருக்கோயில் 

தெற்கு குளக்கரை படிக்கட்டில் 
அருள்மிகு ராமநாதேஸ்வரர் திருக்கோயில் 

ஆகிய திருக்கோயில்கள் உள்ளன ..சரி விஷயத்திற்கு வருகிறேன் .....சில தினங்கள் முன்பு நான் சென்றிருந்தபோது கண் காட்சிகள் அதிர்ச்சிக்கு 
உள்ளாக்கின ......

அன்பர்களே அங்கு சுற்றிலும் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளால் சொல்லொணா அசுத்தத்திற்கும் , ஆக்ரமிப்பிற்கும் ஆளாகியுள்ளது இத்திருக்குளம் ..மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய நிலை ..

துணி துவைப்பதிலிருந்து , காலை கடன்கள் கழிப்பது வரை அனைத்துமே இங்குதான் ....படித்துறையின் நிலையோ கேட்கவே வேண்டாம் .....புதர்கள் மண்டி ...நாற்றம் குடலை பிரட்டுகிறது ....

அன்பர்களே யாரிடம் சொல்வது ?  எவரிடம் முறையிடுவது..? 

ராமர் , சீதை , லக்க்ஷுமணன் மன்மதன் , இரணியன் பூசித்த லிங்கங்கள் தனித்தனி கோயிலாக அமைந்துள்ளன .ஆனால் பக்தர்கள் வருகை என்பது கிடையாது ..பிரதோஷத்திற்கு மட்டும் சில பக்தர்கள் வருவதாக தெரிவிக்கிறார்கள் ....

அன்பர்களே  என் வேண்டுகோள் இரண்டு தான் ...

1. உடனடியாக இத்திருக்குளம் கழிவுகள் அகற்றப்பட்டு சீர் செய்யப்பட வேண்டும்.
     இல்லையேல் இத்திருக்குளம் ஒரு மினி கூவமாக மாறிவிடும் அபாயம் உள்ளது .

2. காஞ்சி காமாக்ஷி , ஏகாம்பரேஸ்வரர் , வரதராஜ பெருமாள் திருக்கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் அற்புத புராதன பொக்கிஷங்களான மேற்சொன்ன திருக்கோயில்களையும் வணங்கி அருள் பெற வேண்டும் 

படத்தில் மிக பிரம்மாண்டமான இரண்யேஸ்வரர் ........மன்மதன் வழிபட்ட காமேஸ்வரர் 







லக்ஷ்மனேஸ்வரர்


Sunday, September 9, 2018

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ......

அன்பர்களே ....
அவன் தரிசனம் பெறுவதற்கே அவன் மனது வைக்க வேண்டும் ...அப்படியென்றால் அவன் திருப்பணியில் பங்கு 
பெறுவது என்றால் பல பல ஜென்மங்களில் புண்ணியம் செய்திருக்க வேண்டுமல்லவா?

ஆன்மீக நெறியிலிருந்து சற்றும் வழுவாத நம் மாமன்னர்கள் பல்லாயிரக்கணக்கான திருக்கோயில்களையும் 
திருக்குளங்களையும் அமைத்து பராமரித்தனரே?  அவர்கள் கட்டிய அரண்மனைகள் இன்று காணப்படவில்லை
ஆனால் அவர்களால் கட்டப்பட்ட திருக்கோயில்கள் வானளாவ இன்றும் அவர்கள் பெருமையை பறைசாற்றுகின்றன அல்லவா?

அவ்வாறு அவர்களால் அரும்பாடுபட்டு உருவாக்கப்பட்ட திருக்கோயில்கள் பராமரிப்பின்றி பாழாகும்போது சிதைவுறும்போது நமக்கென்ன என்று வாளாவிருப்பது எத்தகைய அறியாமை?

நம் அறியாமை அக இருளை நீக்கி , நாம் உய்வதற்காகவே வாராது போல் வந்த மாமணியாக , அன்பர் ஒருவரது கனவில் தோன்றி தன இருப்பிடத்தை உணர்த்தி கோயில் கட்ட பணித்திருக்கிறான் இறைவன் 
என்றால்,  அன்பர்களே இந்த வாய்ப்பினை நாம் தவற விடலாமா?

வாருங்கள் போவோம் ...
வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுக்கா குருவராஜபாளையம் வழி பாக்கம் பாளையம் அஞ்சல் பாக்கம் கிராமத்தில் 1000 வருடங்களுக்கும் மேற்பட்ட திருக்கோயில் ஒன்றில் வீற்றிருக்கும் கைலாசநாதர் பெருமானே தனக்கு கோயில் அமைக்க ஆணையிட்ட பெருமான்...

கொடுத்து வைத்த பாக்கம் கிராம மக்கள் சிரமேற்கொண்டு திருப்பணிகளை ஆரம்பித்து உள்ளனர் இறைவன் திருவருள் ஒன்றையே துணையாக கொண்டு ...

அந்த சகோதரர்களுக்கு நாம் உதவாமல் யார் உதவுவார்கள் ?  அன்பர்களே...வாங்கி கணக்கு விபரங்கள் மற்றும் 
அலைபேசி எண்கள் தந்துள்ளேன் ...

அவன் திருப்பணியில் பங்கு பெற்று அவன் அருளுக்கு பாத்திரம் ஆகுங்கள் ....

தொடர்புக்கு 
சிவ குபேந்திரன் - 9345883326, 
சிவ இராமமூர்த்தி - 9025345747, 
சிவ ஹரிவசந்த் - 8695875868.


Account No.6655846738, IFSC Code:IDIB000O001,
 Indian Bank-odugathur Branch
Bank Account Name: ARULMIGU UMAMAHESWARI UDANURAI KAILAYANATHAR TEMPLE TRUST

கவனிக்க : IFSC code-ல்  மூன்றாவது சைபர் அடுத்து உள்ளது ஆங்கில எழுத்து o வாகும் ...



அஞ்சல் கணக்கு எண் : 3935204147