Saturday, June 23, 2018

விபத்திலிருந்து காக்கும் விடைவாகனன் 

வாகன விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது.
நாளிதழ்களை திறந்தால் தினசரி 10 வாகன விபத்துகளாவது அங்கங்கு ஏற்படுவதை நாம் பார்க்கிறோம்.
விபத்துகள் இல்லாத நாட்களே இல்லை என்றாகிவிட்டது.

இத்தகைய விபத்துகளில்லிருந்து நம்மை பாதுகாத்து கொள்வதற்கு நாம் வணங்க வேண்டியது தஞ்சை மாவட்டம் திருவையாறு, திருநெய்த்தானம் அருகில் இருக்கும் "திருப்பெரும்புலியூர்" வியாக்ரபுரீஸ்வரர்
ஆலயமாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிக புராதனமான ஆலயத்தில், நம் வாகனங்கள் பழையதோ புதிதோ, எடுத்துச் சென்று வழிபட, விடைவாகனன் அருளால், விபத்தில்லா வாழ்வு நாம் பெறலாம்.


ஐந்து புலியூர்களில் இதுவும் ஒன்று .

மற்ற புலியூர்கள் , திருஓமாம்புலியூர் , எருக்கத்தம்புலியூர் ,பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்),பாதிரிபுலியூர் 

தஞ்சையிலிருந்து ,கும்பகோணத்திலிருந்து ,திருவையாறிலிருந்தும் பேருந்து வசதிகள் நிறையவே உள்ளது ..

இறைவி :சௌந்தர்யநாயகி , சம்பந்தரால் தேவார பாடல் பெற்ற இத்தலம் ராஜராஜ சோழன்  காலத்தியது ..
அருணகிரி நாதரும் இத்தல முருகன் குறித்து திருப்புகழ் பாடியுள்ளார் ..

தலவிருட்சம் சரக்கொன்றை .....தீர்த்தம் காவேரி 





Tuesday, June 12, 2018

நலிவடைந்த திருக்கோயில்களில் வழிபாடு செய்யலாமா?
சிதைந்த திருமேனிகளை வணங்கலாமா?

பலருக்கும் இந்த சந்தேகம் உள்ளது ...அன்பர்களே ஒரு வடமொழி ஸ்லோகம் இதற்கு வழி சொல்கிறது .

சிதைந்த சிவாலயங்களை சீர்திருத்துவது , பூசை புனஸ்காரங்களுக்கு வழி வகை செய்வது , அங்கு விளக்கேற்றுவது, திருப்பணிக்கு உதவுவது , போன்றவை அஸ்வமேத  யாகம் செய்வதற்கு ஒப்பாகும் 
என்கிறது அந்த வடமொழி ஸ்லோகம் .....
அன்பர்களே நம் தாய் தந்தைக்கு , நம் நெருங்கிய உறவினருக்கு சந்தர்ப்ப வசத்தால் கை , கால்கள் உடைந்தால் , உடல் உறுப்புகள் சேதமடைந்தால் நாம் அவர்களை ஒதுக்கி விடுவோமா ?

மருத்துவம் பார்க்க மாட்டோமா?அதிக கவனம் அல்லவா எடுத்து கொள்ளவேண்டும் ?
ஒரு திருக்கோயில் சிதிலமடைய துவங்குகிறது என்றால் பல ஆண்டுகளாக கவனிப்பின்றி உள்ளது என்று தானே அர்த்தம் ....நம்மால் புறக்கணிக்கப்படுகிற அத்தகைய திருக்கோயில்களை திருமேனிகளை புனரமைப்போர்க்கு குறைந்த பட்சம் நம்மால் இயன்ற உதவிகளையாவது செய்ய வேண்டாமா?

இம்மைக்கும் மறுமைக்கும் நம்முடைய சந்ததியினருக்கும் பல தலைமுறைகளுக்கு பிறகும் நன்மை பயக்க கூடிய அரிய செயல் இதை விட வேறென்ன உள்ளது ....?  

நம்மால் சேர்த்து வைக்கப்படுகிற சொத்துக்களை விட புண்ணிய காரியங்களே நம் தலைமுறையினரை வாழ்வாங்கு வாழவைக்கும் .....

அன்பர்களே கும்மிடிப்பூண்டி பொன்னி அம்மன் கோவில் அருகே உள்ள இந்த பெருமானுக்கு ஆவுடையார் மற்றும் நந்தியெம்பெருமான் செய்யப்படவேண்டியுள்ளது ......1 டி உயரம் கொண்ட நந்தி 5000 ரூபாயும் ஆவுடையார் சுமார் 10,000 முதல் 25000 வரையும் அளவிற்கு தகுந்தவாறு ஆகிறது ...

இம்மாதிரி பல தலங்களில் இவர்கள் சேவை செய்து வருகின்றனர் ......மேற்கூரை இன்றி இருக்கும் திருமேனிகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணியும் செய்து தருகின்றனர் ..

அலைபேசி எண் குறிப்பிட்டுள்ளேன் ....

சிவ கைங்கர்யம் செய்து அவனருளை அடைய போகிறவர் யார் ? என்பதை உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன் ...

அவன் அருள் பெற்றவர்கள் தானே அவன் திருப்பணிக்கு உதவ முடியும்?
உதவ நினைப்போர் கீழ்கண்ட அடியார் பெருமக்களை அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் .


அடியார் திரு ஜெயபாலன் அவர்கள்  6382588180
அடியார் திரு வெங்கடேசன் அவர்கள் 9444352848


Tuesday, June 5, 2018

குடும்ப மகிழ்ச்சி கூட்ட குமாரபுரி (பெரியபாளையம்) வாங்க ......

செண்பகாரண்ய ஷேத்திரம் எனப்படும் ஆரணி நதியோரம் அமைந்துள்ள 10 சிவாலயங்களில் முதன்மையானகாமாக்ஷி உடனுறை பர்வதீஸ்வரர் திருக்கோயில் கொசவன்பேட்டை ..
தற்போது கொசவன்பேட்டை என வழங்கப்படும் இத்தலம் பெரியபாளையம் அருகில் ஆரணி செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ...

குமரன் பிரதானமாக கோயில் கொண்டுள்ளமையால் குமாரபுரி என்பதே மருவி கொசவன்பேட்டைஎன கூறப்படுவதாக கருத்து நிலவுகிறது .....

 மேற்கு நோக்கிய அற்புதமான திருக்கோயில் .திருப்பணி செய்யப்பட்டு புத்தம் புதிதாக விளங்குகிறது
மூலவர் சுமார் 5 அடி உயரத்தில் நீண்ட பாணம் கொண்டு தேஜோமயமாக அருட்காட்சி நல்குகிறார் பர்வதீஸ்வரர் .

அடடா என்ன அழகு...? என காண்போர் வியக்கும் அற்புத பேரழகோடு நீண்டு நெடிதுயர்ந்த, கைகளில் அங்குசம் பாசம் தாங்கி , அபயஹஸ்தங்களுடன் ,ஒரு காலை முன்னர் வைத்து பெண்களுக்குரிய நளினங்களுடன்6 அடி உயரத்தில் அன்னை காமாக்ஷி காட்சி தருகிறாள் ..வைத்த கண் வாங்காமல் அவளை உற்று நோக்குகிறோம் ..

அவள் அழகுக்கு அழகு சேர்ப்பதுபோல் அலங்கார ரூபிணியாக வெள்ளி கவசங்களுடன்  சிவாச்சாரியார் காங்கேயன் அவர்களின் கைவண்ணம் மெச்சத்தக்கது ...சுமார் 3 தலைமுறைகளாக இவர்கள் இத்திருக்கோயிலுக்கு சேவை புரிகிறார்கள் .....இவர் கிரஹம் கோயில் வளாகத்திலேயே உள்ளது ...
பலா மரம் தல விருட்சம் 


அம்பாள் வலப்புறம் அமர்ந்துள்ளதால் கல்யாண கோலம் கொண்டு தன்னை நாடி வரும் திருமணமாகாத அன்பர்களுக்கு திருமண வரம் நல்குகிறாள் ....

சிவாலயத்திற்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடைபெறுகிறது என்றாலும் திருவாதிரை நன்னாள் குறிப்பிட தகுந்தது .....அன்று காரைக்கால் மாங்கனி திருவிழாவை போலவே இங்கும் இறைவன் உலா வரும் போது அவர் மீது அன்பின் மிகுதியால் பழங்களை வீசி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர் .
அன்று ஊரே விழா கோலம் பூண்டிருக்கும் .....பெண்கள் வாசலில் கோலமிட்டு இறைவன் வருகைக்காக காத்திருப்பர்

இங்கு வந்து வழிபடுவோருக்கு திருமண தடை நீக்குவதோடு .....வாத வழக்குகளில் வெற்றி தம்பதியினரிடையே ஒற்றுமை மொத்தத்தில் இங்கு வந்து வழிபடுவோர் குடும்பத்தில் இன்னல்கள் நீங்கும் ....குறைவில்லா  மகிழ்ச்சி கூடும் ...
எனவே அன்பர்களே வாழ்வில் ஒருமுறையேனும் இத்திருக்கோயில் வந்து இறைவனையும் இறைவியையும் வணங்கி செல்லுங்கள் .....பின் அவர் பார்த்துக்கொள்வார் உங்களை .....

குருக்கள் அலைபேசி எண் :8124602646

ஆவடி ,  பெரியபாளையத்திலிருந்து பேருந்து வசதி நிறைய உள்ளது ..





Saturday, June 2, 2018

⧭ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டை .......
          ⧭அமைதியாய் அருளும் அரன்....... 


எப்போதும் பரபரப்பாய் இயங்கும்  ,ஆயிரக்கணக்கானோர் பணிபுரியும் அம்பத்தூர் தொழிற்பேட்டை 
ரயில்நிலையம் பட்டரவாக்கம்....

இங்கு இருக்கும் இடமே தெரியாமல் சிதைந்த நிலையில் கோயில் கொண்டுள்ளார் ஜகத் ஜனனி சமேத ஜெகதீஸ்வரர் .....

300 ஆண்டுகளுக்கும் முற்பட்டவர் .......3 ஆண்டுகளாக இவருக்கு திருக்கோயில் கட்ட முயன்று கடைக்கால் பணிகளோடு திருப்பணி நின்று  விட்டது.....

பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றாலும் தினசரி பக்தர்கள் வருகை என்பது அறவே இல்லை 
பிரதோஷத்தன்று மட்டும் மக்கள் கூடுவதாக சொல்கிறார்கள் ....

இப்பெருமான் கோயில் கொண்டதற்கான வரலாறு எதுவும் அறிந்துகொள்ள இயலவில்லை 


ஆவுடையார் பின்னப்பட்டுள்ளதால் ,பெருமானை தனியாக எடுத்து பாலாலயம் செய்துள்ளார்கள் ....

சிவாச்சாரியார் திரு முத்துக்குமரன் முகப்பேரிலிருந்து வந்து பூசை செய்து விட்டு செல்கிறார் 
அவர் அலைபேசி எண் 9444178149....

அருகில் பொன்னியம்மன் திருக்கோயில் நல்ல நிலையில் இயங்குகிறது ...பெருமாள் கோவில் ஒன்றும் இருப்பதாக கூறுகிறார்கள் ......

பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகில் இத்தலம் உள்ளது ......முதல் குறுக்கு பிரதான தெருவின் முடிவில்  அமைந்துள்ளது...

விசாரித்து செல்லலாம் ....

அஸ்பெஸ்டாஸ்  கூரையில் அருளும் இப்பெருமானை எப்போதும் தரிசனம் செய்யலாம் ..ஆனால் சற்று கூர்ந்து கவனித்தால் தான் கோயில் இருக்குமிடம் தெரிகிறது .....
கோயில் வளாகம் தொழிற்சாலை கழிவுகள் கொட்டும் இடமாக உள்ளது , வருத்தம் அளிப்பதாக உள்ளது 


அன்பர்களே ......ஜெகதீசனை தரிசனம் செய்யுங்கள் .....திருக்கோயில் நிலையை உலகறிய செய்யுங்கள் 
அரன் திருக்கோயில் முற்றுப்பெற உதவுங்கள்.......
சிவாச்சாரியார் திரு முத்துக்குமரன் 
  அலைபேசி எண் 9444178149....