Saturday, June 23, 2018

விபத்திலிருந்து காக்கும் விடைவாகனன் 

வாகன விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது.
நாளிதழ்களை திறந்தால் தினசரி 10 வாகன விபத்துகளாவது அங்கங்கு ஏற்படுவதை நாம் பார்க்கிறோம்.
விபத்துகள் இல்லாத நாட்களே இல்லை என்றாகிவிட்டது.

இத்தகைய விபத்துகளில்லிருந்து நம்மை பாதுகாத்து கொள்வதற்கு நாம் வணங்க வேண்டியது தஞ்சை மாவட்டம் திருவையாறு, திருநெய்த்தானம் அருகில் இருக்கும் "திருப்பெரும்புலியூர்" வியாக்ரபுரீஸ்வரர்
ஆலயமாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிக புராதனமான ஆலயத்தில், நம் வாகனங்கள் பழையதோ புதிதோ, எடுத்துச் சென்று வழிபட, விடைவாகனன் அருளால், விபத்தில்லா வாழ்வு நாம் பெறலாம்.


ஐந்து புலியூர்களில் இதுவும் ஒன்று .

மற்ற புலியூர்கள் , திருஓமாம்புலியூர் , எருக்கத்தம்புலியூர் ,பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்),பாதிரிபுலியூர் 

தஞ்சையிலிருந்து ,கும்பகோணத்திலிருந்து ,திருவையாறிலிருந்தும் பேருந்து வசதிகள் நிறையவே உள்ளது ..

இறைவி :சௌந்தர்யநாயகி , சம்பந்தரால் தேவார பாடல் பெற்ற இத்தலம் ராஜராஜ சோழன்  காலத்தியது ..
அருணகிரி நாதரும் இத்தல முருகன் குறித்து திருப்புகழ் பாடியுள்ளார் ..

தலவிருட்சம் சரக்கொன்றை .....தீர்த்தம் காவேரி 





No comments:

Post a Comment