Tuesday, June 6, 2017

காசியினும் வீசம் அதிகம் 

மெய்யன்பர்களே , இறைவன் ருத்ரகோடீஸ்வரர் என்னும் பெயரை தாங்கிய திருகோயில்கள் மிகவும் குறைவு.
அதிலும் எதிரே மயான பூமியை பார்த்த வண்ணம் உள்ள திருகோயில்கள் மிக சிலவே(தற்போது இல்லை ). அத்தகைய திருகோயில்கள் சிறந்த பரிகார தலங்களாகும் .

கபில மகரிஷி , இறந்த தன் தந்தைக்கு காசியில் ஈம சடங்குகளை செய்ய எண்ணினார். அது சாத்தியமில்லாமல் போகவே இத்திருத்தலத்தில் அதனை நிறைவேற்றினார் . எனவே இத்தலம் காசியை விட வீசம் அதிகமாக
போற்றப்பட்டு வந்தது .
இறைவன் ருத்திரகோடீஸ்வரர், பேரழகு வாய்ந்த, மிக பருத்த திருமேனி உடையவர் .

பிதுர் நிவர்த்தி ஸ்தலமாக கருதப்படும் இத்தலம் திருவாரூர் பேருந்து நிலையத்திற்கு மிக அருகமையில்
மக்கள் அதிக அளவில் வசிக்கும் இடத்திலே தான் அமைந்துள்ளது .(காட்டு கார தெரு, சோழா திரையரங்கம் அருகில்)

ஆனால் கோவிலின் நிலை ???? கோமா நிலையில் இருக்கும் இத்திருகோயிலை மீட்டெடுப்பது நம் கையில் தான் உள்ளது .