Saturday, March 30, 2019

நலிவடைந்த திருக்கோயில்களை  வழிபடலாமா?
வானமே கூரையாக தனித்து விடப்பட்ட திருமேனிகளை வழிபடலாமா?

அன்பர்களே ....இந்த சந்தேகம் இல்லாதவர்களே இல்லை .....

அன்பர்களே ...நீங்கள் நடந்து செல்லும் வழியில் ஒரு 2000  ருபாய் தாள் ஒன்றுஅனாமத்தாககிடக்கிறது என்றுவைத்துகொள்ளுங்கள்....அவ்வளவு வேண்டாம் ஒரு 500 ருபாய் நோட்டு ...ஒரு 10 ருபாய் ..அது ஒரு ரூபாயாகவே இருந்தாலும் , நம் மனம் எவ்வளவு அலைபாய்கிறது சுற்றிலும் இருப்பவர்கள் யாரவது பார்க்கிறார்களா என்று?

நம் மனதிற்கு தெரியும் அது மதிப்பு மிக்கது என்று ..அதை குப்பையில் கிடைப்பதால் வெறும் தாள் என்று ஒருவரும் ஒதுக்குவது இல்லை ..

ஆனால் ஏன் இறைவனின் மகிமையை மட்டும் சந்தேகிக்கிறோம் ? அவர் தனித்து விடப்பட்டால் ...அவரும் நம் மதிப்பிற்கும் , வழிபாட்டிற்கும் உரியவரே ......குப்பையில் கிடைப்பதால் வைரம் கரிக்கல்லாக மாறிவிடாது ..   

இது உண்மை என்று உங்கள் மனதிற்கு பட்டால் வாருங்கள் அத்தகைய 
திருமேனிகளை சரிசெய்து , விஷ்ணுபாகம் எனப்படும் ஆவுடையார் அமைத்து , நந்தியெம்பெருமானை பிரதிஷ்டை செய்து , குறைந்த பட்ஷம் மேற்கூரை இட்டு , அப்பெருமானை வழிபாட்டிற்கு கொண்டு வர ப்ரம்ம பிரயத்தனம் செய்கிறார்கள் இம்மன்றத்தினர் ......

அன்பர்களே ...இப்பெருமான்கள் ஒன்றும் திடீரெனெ முளைத்து விடவில்லை ..பல்லாண்டு காலங்களாக பல்வேறு ரிஷிகளாலும் , மகான்களாலும் ,முனிவர்களாலும் ,தேவார மூவர்களாலும் வழிபட பெற்று பேரரசர்களால் கட்டப்பட்ட திருக்கோயில்களில் குடிகொண்டு அருளாட்சி செய்து , பின்னர் காலமாற்றங்களினாலும்  , நம் அசிரத்தையினாலும் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை  ..

நம் கடமை என்ன?

இத்தகைய அரிய செயலை செய்வோர்க்கு உதவிக்கரம் நீட்டுவது, பலருக்கும் தெரியப்படுத்துவது  நம் கடமை ...
இதனால் நாம் மட்டுமின்றி நம் சந்ததியினரும் பெரும் பலனை அடைவார்கள் ...சிவ திருப்பணிக்கென ஒரு செங்கல்லை வழங்கினாலே நம் குலம் தழைத்தோங்கும் ...வாழ்வாங்கு வாழும் ....

கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை

அலைபேசி எண்கள் 9444 352848/ 9677226260

திரு ஜெயபாலன் அலைபேசி எண் 99410 45123
இந்த எண்களில் தொடர்பு கொண்டு உங்கள் ஆதரவை தெரிவிக்கலாம் ... மேற்கூரை அற்ற பெருமான்களுக்கு திருப்பணி செய்ய உங்கள் அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் தேவை ..... மதுராந்தகம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள திருமேனிகள் உங்கள் பார்வைக்காக





விச்சூர் கிராமம் செங்கல்பட்டு ---காஞ்சிபுரம் அருகில் இவர்களது திருப்பணி .....

திருப்பணிக்கு முன்பிருந்த நிலை

முகநூல் பக்கம்

Friday, March 22, 2019

நீங்காத செல்வ வளம் பெருக , தம்பதியர் பிணக்குகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழ

வாருங்கள் நின்றவூர் லட்சுமி புரீஸ்வரரின் அருளை பெற்று வரலாம் .....

எங்குள்ளது ?  

திருவள்ளூர் மாவட்டம் சென்னை -திருவள்ளூர் பேருந்து மார்க்கத்தில் (ஆவடி வழி)திருநின்றவூர் உள்ளது .... 

108 திவ்ய ஷேத்திரத்தில் ஒன்றான, புகழ் பெற்ற  பக்த வத்சல பெருமாள் திருக்கோயில் இங்கு உள்ளது.
இதய நோய்கள் நீக்கும் பரிகார தலமான இருதயாலீஸ்வரர் திருக்கோயிலும் இங்கு தான் உள்ளது ..
பூசலார் நாயனார் பிறந்து வளர்ந்து இவரால் வழிபட பெற்ற கைலாசநாதர் திருக்கோயிலும் இவ்வூருக்கு புகழ் சேர்க்கிறது .(இத்திருக்கோயில் திருப்பணி தற்போது நடைபெற்று வருகிறது )

தல புராணம் 

சந்தர்ப்பவசத்தால் தன் கணவனான திருமாலை பிரிந்த மஹாலக்ஷ்மி , இத்தலத்தில் சிவபெருமானை நின்றபடியே தியானித்து , தவம்புரிந்து ,பின் அவர் அருளால் தன் பதியை அடைந்ததால் , இப்பெருமான் 
லட்சுமிபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் ..

திருவாகிய மகாலக்ஷ்மி நின்றபடி தவம் புரிந்த இடமாகையால் இத்தலம் திருநின்றவூர் ஆயிற்று .

இப்பெருமானை உள்ளன்போடு வழிபடுவதால் வறுமை அகலுவதோடு , பிரிந்திருந்த கணவன் மனைவியர் மீண்டும் வாழ்க்கையில் ஒன்றிணைவர் என்பது திண்ணம் ...

ஆனால் அன்பர்களே .....இப்பெருமான் இருப்பதே இப்பகுதி மக்கள் அறியாதது தான் சோகம் .
ஏனெனில் , இப்பெருமான் பக்தவத்சல பெருமாள் கோயில் அருகில் புதர் மண்டிய ஒரு இடத்தில் பல காலமாக பூசைகள் இன்றி இருந்தார்.  பின்னர் பக்தர்கள் முயற்சியின் பேரில் இக்கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்கும் கன்னிமார் கோயில் எனப்படும் கன்னியம்மன் கோயில் வளாகத்தில் மிகச்சிறிய ஒரு இடத்தில் தற்போது கோயில் கொண்டுள்ளார் ....

கன்னியம்மன் கோயில் பக்தவத்சல பெருமாள் கோயிலுக்கு மிக அருகில் எல்லம்மன் கோயில் எதிரில் ஒரு சிறிய சந்தில் உள்ளது ...

அன்பர்களே ...கையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய்க்கு அலைவார்கள் ...என்பார்கள் .அதுபோன்று நம்மிடையே உள்ள புராதன பெருமை மிக்க திருக்கோயில்களை நாம் அறியாமல் உதாசீனம் செய்கிறோம் ....எங்கெங்கோ அலைகிறோம் ....நேரத்தையும் பணத்தையும் விரயமாக்குகிறோம்...

இப்பெருமானை தொடர்ந்து திங்கட்கிழமைகளில் வில்வ இலைகளால் அர்ச்சிப்போருக்கு வறுமை அறவே நீங்கி செல்வ வளத்தோடு திகழ்வார்கள் என்பது உறுதி . எனவே பண பிரச்சனைகளால் அவதி உறுவோர் இப்பெருமானை வணங்கி வரலாம் .....

திருநின்றவூர் ரயில் நிலையத்திலிருந்து இத்திருக்கோயில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது .ஷேர் ஆட்டோ வசதி நிறைய உள்ளது .

திறந்திருக்கும் நேரம்: இரும்பு கம்பிகளின் இடைவெளியில் எப்போதும் காணலாம் .


இத்திருக்கோயில் புராண வரலாறுகளை பற்றி விரிவாக அறிய aadhav101.blogspot.com/  என்ற வலைத்தளத்தை நீங்கள் நாடலாம் .