Friday, March 22, 2019

நீங்காத செல்வ வளம் பெருக , தம்பதியர் பிணக்குகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழ

வாருங்கள் நின்றவூர் லட்சுமி புரீஸ்வரரின் அருளை பெற்று வரலாம் .....

எங்குள்ளது ?  

திருவள்ளூர் மாவட்டம் சென்னை -திருவள்ளூர் பேருந்து மார்க்கத்தில் (ஆவடி வழி)திருநின்றவூர் உள்ளது .... 

108 திவ்ய ஷேத்திரத்தில் ஒன்றான, புகழ் பெற்ற  பக்த வத்சல பெருமாள் திருக்கோயில் இங்கு உள்ளது.
இதய நோய்கள் நீக்கும் பரிகார தலமான இருதயாலீஸ்வரர் திருக்கோயிலும் இங்கு தான் உள்ளது ..
பூசலார் நாயனார் பிறந்து வளர்ந்து இவரால் வழிபட பெற்ற கைலாசநாதர் திருக்கோயிலும் இவ்வூருக்கு புகழ் சேர்க்கிறது .(இத்திருக்கோயில் திருப்பணி தற்போது நடைபெற்று வருகிறது )

தல புராணம் 

சந்தர்ப்பவசத்தால் தன் கணவனான திருமாலை பிரிந்த மஹாலக்ஷ்மி , இத்தலத்தில் சிவபெருமானை நின்றபடியே தியானித்து , தவம்புரிந்து ,பின் அவர் அருளால் தன் பதியை அடைந்ததால் , இப்பெருமான் 
லட்சுமிபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் ..

திருவாகிய மகாலக்ஷ்மி நின்றபடி தவம் புரிந்த இடமாகையால் இத்தலம் திருநின்றவூர் ஆயிற்று .

இப்பெருமானை உள்ளன்போடு வழிபடுவதால் வறுமை அகலுவதோடு , பிரிந்திருந்த கணவன் மனைவியர் மீண்டும் வாழ்க்கையில் ஒன்றிணைவர் என்பது திண்ணம் ...

ஆனால் அன்பர்களே .....இப்பெருமான் இருப்பதே இப்பகுதி மக்கள் அறியாதது தான் சோகம் .
ஏனெனில் , இப்பெருமான் பக்தவத்சல பெருமாள் கோயில் அருகில் புதர் மண்டிய ஒரு இடத்தில் பல காலமாக பூசைகள் இன்றி இருந்தார்.  பின்னர் பக்தர்கள் முயற்சியின் பேரில் இக்கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்கும் கன்னிமார் கோயில் எனப்படும் கன்னியம்மன் கோயில் வளாகத்தில் மிகச்சிறிய ஒரு இடத்தில் தற்போது கோயில் கொண்டுள்ளார் ....

கன்னியம்மன் கோயில் பக்தவத்சல பெருமாள் கோயிலுக்கு மிக அருகில் எல்லம்மன் கோயில் எதிரில் ஒரு சிறிய சந்தில் உள்ளது ...

அன்பர்களே ...கையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய்க்கு அலைவார்கள் ...என்பார்கள் .அதுபோன்று நம்மிடையே உள்ள புராதன பெருமை மிக்க திருக்கோயில்களை நாம் அறியாமல் உதாசீனம் செய்கிறோம் ....எங்கெங்கோ அலைகிறோம் ....நேரத்தையும் பணத்தையும் விரயமாக்குகிறோம்...

இப்பெருமானை தொடர்ந்து திங்கட்கிழமைகளில் வில்வ இலைகளால் அர்ச்சிப்போருக்கு வறுமை அறவே நீங்கி செல்வ வளத்தோடு திகழ்வார்கள் என்பது உறுதி . எனவே பண பிரச்சனைகளால் அவதி உறுவோர் இப்பெருமானை வணங்கி வரலாம் .....

திருநின்றவூர் ரயில் நிலையத்திலிருந்து இத்திருக்கோயில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது .ஷேர் ஆட்டோ வசதி நிறைய உள்ளது .

திறந்திருக்கும் நேரம்: இரும்பு கம்பிகளின் இடைவெளியில் எப்போதும் காணலாம் .


இத்திருக்கோயில் புராண வரலாறுகளை பற்றி விரிவாக அறிய aadhav101.blogspot.com/  என்ற வலைத்தளத்தை நீங்கள் நாடலாம் .


1 comment:

  1. திருநின்றவூரில் உள்ள மற்ற சிவாலயங்கள் பற்றி அரிய

    https://shivatemplesofchennaiandsurroundings.blogspot.com/2019/02/thirunindravur-shiva-temples.html?m=1

    ReplyDelete