Monday, July 2, 2018

மறைந்து நின்றிந்த மாமணி சோதியான் .......பூமியை பிளந்து வந்துள்ளான் நாம் உய்வதற்காக ....

எத்தனை எத்தனை ஞானிகள் , ரிஷிகள், மகான்கள் , முனிவர்கள் சித்த புருஷர்களால் வணங்க பட்டிருப்பார் இவர்?  எத்தனை திருவிழாக்கள் , உற்ஸவங்கள் கண்டிருப்பார் ? எத்தனை பிரம்மாண்டமான திருக்கோயிலில் குடியிருந்து அருள்புரிந்திருப்பார்? 

இப்படிப்பட்ட திருமேனிகள் நமக்கு கிடைக்குமாயின் அதை விட நாம் செய்துள்ள தவம் வேறென்ன உள்ளது ?

வராது போல் வந்த மாமணியாக வந்துள்ள இப்பெருமானுக்கு திருக்கோயில் அமைக்க நாம் கொடுத்து அல்லவா வைத்திருக்க வேண்டும் ? 

வாருங்கள் போவோம் அன்பர்களே அத்திப்பாக்கம் என்னும் கிராமம் நோக்கி .....
இங்கு மிக பிரம்மாண்டமான திருமேனியராக, நம்மை ஆட்கொள்வதற்காக பலகாலம் பூமியில் புதைந்திருந்த 
இப்பெருமான் கண்டெடுக்கப் பட்டுள்ளார் ..சுமார் 2500 ஆண்டுகள் பழமையானவராக கருதப்படுகிறார் ..
கிராம மக்களால் தற்போது திருப்பணி துவங்கப்பட்டுள்ளது ....

தற்போது தரைத்தளம் வரையே கட்டப்பட்டுள்ளது ....எஞ்சியிருக்கும் பணிகளை முடிக்க , அன்பர்களே அனைவரது ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது ...
விவசாயத்தை பிரதானமாக கொண்ட கிராம மக்களால் பிறரது உதவி இல்லாமல் திருப்பணியை முடிப்பது மிக சிரமம் அல்லவா?  

ஆகவே இதை கண்ணுறும் ஆன்மீக அன்பர்கள் , சிவ பக்தர்கள் , பொது மக்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் .....

கீழ் வரும் அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு உங்கள் உதவியை நல்குங்கள் ....இறைவன் அருளுக்கு பாத்திரமாகுங்கள் ......
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கிராம மக்களுக்கு உதவிடுங்கள் ...

இருப்பிடம் :  அத்திப்பாக்கம் கிராமம் விழுப்புரம் மாவட்டம் , திருக்கோவிலூர் வட்டம் , திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் உள்ளது .....

அலைபேசி எண்கள் :

சிவ ஈஸ்வரன் 9176757479
சிவ  ஏழுமலை (பாண்டிச்சேரி) 8300086563
சிவ  மணிகண்டன்(அத்திப்பாக்கம்) 8523940178

சிவ  ஏழுமலை முதலூர் 9865629567