Monday, November 11, 2019

அல்லல் என் செய்யும் ? அருவினை என் செய்யும் ? ஆபத்தாருண சுவாமி கடைக்கண் பார்வை முன்னே ...

அருள்மிகு காமாட்சி அம்மை உடனாய ஆபத்தாருண சுவாமி, அம்பல், நாகை மாவட்டம்.(சட்ட நாத சாமி கோயில் )

காரைக்கால் -பூந்தோட்டம் வழித்தடத்தில் உள்ளது தேவார பாடல் பெற்ற அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ....இத்திருக்கோயிலிலிருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ளது ஆபத்தாருண சுவாமி திருக்கோயில் .
சட்டநாதர் கோயில் என்று அழைக்கப்படும் இத்திருக்கோயிலை கண்டால் கதறி விடுவீர்கள் ........

மிகச்சிறந்ததொரு பரிகார தலம் மிகவும் சிதிலமடைந்து புதர்கள் மண்டி , ஒரு நல்ல ஓவியத்தை கண்ணா பின்னா வென்று கசக்கி போட்டதுபோல் உள்ளது அதன் இன்றைய நிலை .

சட்டநாத பெருமான் தன் சூலாயுதத்தால் உருவாக்கிய தீர்த்தம் இங்கு உள்ளது . இது சகல ரோகங்களையும் நொடியில் போக்க வல்லது ...... குறிப்பாக தொழு நோய் ....இந்நோய் உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் நீராடி இப்பெருமானை உளமார வணங்கி , இந்நீரினை பருகி வர தொழு நோய் உள்ளிட்ட தீராத நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை ...

இன்று இத்தீர்த்தம் சுருங்கி ஒரு கிணறு மட்டுமே காட்சியளிக்கிறது ......

கருவறையில் இறைவன் ஆபத்தாருண சுவாமி , நம் ஆபத்துகளை களையும் விதமாக தேஜோமயமாக விளங்குகிறார் ......பார்த்த மாத்திரத்தில் நம் கண்கள் பணிக்கிறது ....

திருகோயில் மெய்காப்பாளர் திரு மோகன் அவர்கள் கோயில் அருகிலேயே உள்ளார். தரிசனம் செய்ய உதவுகிறார்.
       
அவர் மொபைல் எண் 9962184946

இத்தகைய அரிய திருகோயில்களை நாம் இழந்துவிட கூடாது.
அன்பர்களே குறைந்த பட்ஷம் சென்று தரிசனமாவது செய்வோம் .

அன்பர்களே ......இறைவன் கருணை கடல் தான் ...ஆனால் நாம் மொள்ள உபயோகிக்கும் பாத்திரம் தான் மிக சிறிது . இது யாரால் சொல்லப்பட்ட வரிகள் என்பது தெரியவில்லை ....ஆனால் இத்திருக்கோயிலை  பார்க்கும்போது  இந்த வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது ..


Thursday, November 7, 2019

90% சென்னை மக்கள் அறியாத சென்னை சிவப்பதிகள் ...
தொலைந்து போன அடையாளங்கள் ....

முன்பு இருந்தது போல் அன்று சென்னை மாநகரில் ஆளுயர கட்டடங்கள் இல்லை ... பேருந்து வாகன நெரிசல்கள் இல்லை ....தொழில் நுட்ப வசதிகள் இல்லை 

ஆனால் 
வானுயர திருக்கோயில்கள் இருந்தன ...
தேரோடும் வீதிகள் இருந்தன ....
ஆன்மீக ஈடுபாடு இருந்தது ......

அசுர வளர்ச்சியாலும் அந்நியர்கள் படையெடுப்பு , மற்றும் மாற்று மதத்தினர் காழ்ப்பு உணர்ச்சியாலும் நம் சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த திருக்கோயில்களின் மூலவர்கள் சிலவற்றின் நிலைமையை இந்த பதிவின் மூலமாக பார்க்கலாம் வாருங்கள்...
அமைஞ்சிக்கரை , சேத்துப்பட்டு பகுதி 

அமைந்தகரை அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் 
அகத்தியர் வழிபட்ட ஒரு காலத்தில் மிகப்பெரிய திருக்கோயிலாக கோலோச்சி கொண்டிருந்த ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் இன்று ஆனந்தவல்லி தெரு முனையில் ஒரு மரத்தடியில் உள்ள மிகச்சிறிய அம்மன் கோயில் ஒன்றில் பாணம் உயரம் குறைக்கப்பட நிலையில் உள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆனால் அது தான் உண்மை. 

கிட்டத்தட்ட தூக்கி வீசப்பட்ட இவரது பிரம்மாண்டமான திருக்கோயில் இருந்த இடத்தில் தற்போது தேவாலயம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது ...

இருப்பிடம் ...அய்யாவு நாயுடு காலனி , விஜயேஸ்வரி தெரு .....சர்ச் அருகில் ..
( படம் பார்க்க)

சேத்துப்பட்டு கைலாயநாதர் 

அடுத்து நாம் தரிசனம் செய்ய இருப்பது குட்டலை அம்மன் கோயில் (கட்டளை தான் குட்டலை ஆகிவிட்டது )
வளாகத்தில் அமர்ந்து அருள்பலிக்கும் கைலாயநாதர் .....சேத்துப்பட்டு .
இவரும் தனி பெரும் கோயில் கொண்டு விளங்கியவர் தாம் ....
மிக சிறிய கோயில் தான் ..சுயம்பு லிங்க திருமேனி . 
என்ன விசேஷம் என்றால் இவர் திருமேனியில் ஓம் என்று பொளிந்து வைத்துள்ளார்கள் ....
உளி கொண்டு .....ஏன் என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம் .
( படம் பார்க்க)

சேத்துப்பட்டு சிவன் 1

அடுத்து சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகில் வெட்ட வெளியில் மயானம் அருகே (தற்போது இல்லை )
அமைந்திருக்கும் சிறிய அம்மன் கோயில் வெளியே உள்ள லிங்க திருமேனி ....
பார்க்க மிக வித்யாசமான திருமேனி .....
இவரை தரிசனம் செய்ய அருகில் உள்ளோரிடம் விசாரித்து செல்ல வேண்டும் ..

சேட்பட் சிவன் 2

அடுத்து நமக்கு சற்றே ஆறுதல் அளிப்பது சேத்துப்பட்டு மெக் நிக்கோலஸ் தெரு முனையில் உள்ள ஓம் சக்தி பால விநாயகர் திருக்கோயிலில் உள்ள சோமநாத பெருமான் தான் .
சிறிய கோவிலாக இருந்தாலும் பிரம்மாண்டமான விநாயகர் , அம்பாள் , முருகன், பைரவர் அனைவரும் நம்மை வசீகரிக்கும் விதத்தில் எழுந்தருளியுள்ளார்கள் .மிக நேர்த்தியான சிலா ரூபங்கள் ....நன்கு பராமரிக்கப்படும் திருக்கோயில் ....


இன்னும் இதுபோன்று பல திருக்கோயில்கள் தங்கள் அடையாளத்தை தொலைத்து நிற்கின்றன ...நம் சிங்கார சென்னையில் 

அன்பர்களே ....
நாம் என்ன செய்யபோகிறோம் ?  
இப்போது விழித்து கொள்ளாவிட்டால் பின் எப்போது ?

சென்று தரிசனம் செய்யுங்கள் குடும்பத்தாருடன் ...

பிரபல திருக்கோயில்களை , கூட்டத்துடன் கூட்டமாக , வரிசையில் நின்று தரிசிப்பதை தவிர்த்து இத்தகைய திருகோயில்களை நாடி சென்று வணங்குங்கள் ....


இருக்கும் திருக்கோயில்களையாவது காப்பாற்ற வேண்டும் அல்லவா? 
அந்நியர்களின் கைகளிலிருந்து தன் இன்னுயிரை ஈந்து காப்பாற்றப்பட்ட அந்த மூலவர்களை நாம் சென்று தரிசிக்க கூட தயங்குகிறோம் என்பதே கசப்பான உண்மை ....

அகஸ்தீஸ்வரர்-அமைந்தகரை 



கைலாயநாதர் --குட்டலை  அம்மன் கோயில் -சேத்துப்பட்டு 
சிவன் கோயில் -சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகில் 


சோமநாதர் திருக்கோயில் -மெக் நிக்கோலஸ் தெரு -சேத்துப்பட்டு