Monday, November 11, 2019

அல்லல் என் செய்யும் ? அருவினை என் செய்யும் ? ஆபத்தாருண சுவாமி கடைக்கண் பார்வை முன்னே ...

அருள்மிகு காமாட்சி அம்மை உடனாய ஆபத்தாருண சுவாமி, அம்பல், நாகை மாவட்டம்.(சட்ட நாத சாமி கோயில் )

காரைக்கால் -பூந்தோட்டம் வழித்தடத்தில் உள்ளது தேவார பாடல் பெற்ற அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ....இத்திருக்கோயிலிலிருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ளது ஆபத்தாருண சுவாமி திருக்கோயில் .
சட்டநாதர் கோயில் என்று அழைக்கப்படும் இத்திருக்கோயிலை கண்டால் கதறி விடுவீர்கள் ........

மிகச்சிறந்ததொரு பரிகார தலம் மிகவும் சிதிலமடைந்து புதர்கள் மண்டி , ஒரு நல்ல ஓவியத்தை கண்ணா பின்னா வென்று கசக்கி போட்டதுபோல் உள்ளது அதன் இன்றைய நிலை .

சட்டநாத பெருமான் தன் சூலாயுதத்தால் உருவாக்கிய தீர்த்தம் இங்கு உள்ளது . இது சகல ரோகங்களையும் நொடியில் போக்க வல்லது ...... குறிப்பாக தொழு நோய் ....இந்நோய் உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் நீராடி இப்பெருமானை உளமார வணங்கி , இந்நீரினை பருகி வர தொழு நோய் உள்ளிட்ட தீராத நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை ...

இன்று இத்தீர்த்தம் சுருங்கி ஒரு கிணறு மட்டுமே காட்சியளிக்கிறது ......

கருவறையில் இறைவன் ஆபத்தாருண சுவாமி , நம் ஆபத்துகளை களையும் விதமாக தேஜோமயமாக விளங்குகிறார் ......பார்த்த மாத்திரத்தில் நம் கண்கள் பணிக்கிறது ....

திருகோயில் மெய்காப்பாளர் திரு மோகன் அவர்கள் கோயில் அருகிலேயே உள்ளார். தரிசனம் செய்ய உதவுகிறார்.
       
அவர் மொபைல் எண் 9962184946

இத்தகைய அரிய திருகோயில்களை நாம் இழந்துவிட கூடாது.
அன்பர்களே குறைந்த பட்ஷம் சென்று தரிசனமாவது செய்வோம் .

அன்பர்களே ......இறைவன் கருணை கடல் தான் ...ஆனால் நாம் மொள்ள உபயோகிக்கும் பாத்திரம் தான் மிக சிறிது . இது யாரால் சொல்லப்பட்ட வரிகள் என்பது தெரியவில்லை ....ஆனால் இத்திருக்கோயிலை  பார்க்கும்போது  இந்த வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது ..


No comments:

Post a Comment