Friday, October 26, 2018

சிவன் கோவிலா? இங்கா? இல்லவே இல்லையே......!

அரிச்சந்திரபுரம் .....! ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில். அன்னை ஸ்ரீ சௌந்தர்யவல்லி .குடந்தையிலிருந்து பட்டீஸ்வரம் செல்லும் சாலையில் சோழன்மாளிகை என்ற இடத்திற்கு முன்னதாவே வரும் ...தேவார வைப்பு தலங்கள் வரிசையில் வரும் தலங்களுள் இதுவும் ஒன்று.  (அப்பரின் திருவீழிமிழலை திருக்கோயில் பதிகத்தில் வருகிறது)

ஆனால் அந்தோ பரிதாபம் ..! இத்தலத்தின் பெயரை சொல்லி கேட்டாலும் , சிவன் கோயில் என்று கேட்டாலும் இறைவன் திருப்பெயரான ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில் என்று கேட்டாலும் ,அப்படி ஒரு 
திருக்கோயில் இங்கு இல்லவே இல்லை என்று சாதிக்கிறார்கள் அருகில் உள்ள மக்கள் ...

அன்பர்களே .....இது எவ்வளவு  அவல நிலை ? அருகில் உள்ள இறைவனை ஆராதியுங்கள் ! குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தானே குடியிருப்பார்கள் ?

திருக்கோயில் ,திருப்பணி செம்மல் ஸ்ரீமதி மஹாலக்ஷ்மி சுப்ரமண்யம் அவர்கள் ஆசியோடு ஆன்மீக அன்பர்கள் பலரது பெருமுயற்சியால் திருப்பணி நிறைவேற்றப்பட்டு  தூய்மையுடன் அழகான சூழலில் அமைதியாக விளங்குகிறது ...

முன்னர், இத்திருக்கோயிலின் சிலைகள் முழுதுமாக திருடப்பட்டு பராமரிப்பின்றி இறைவன் மட்டுமே தனித்து விடப்பட்டார். பல்லாண்டுகளுக்குப்பிறகு தற்போது திருப்பணி நிறைவேற்றப்பட்டாலும் திருக்கோயில் பெரும்பாலும் மூடியே உள்ளது பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ காலங்கள் நீங்கலாக ...

அன்பர்களே ...குறைந்தபட்ஷம் தேவார பாடல் பெற்ற தலங்களையாவது பகல் 12 மணி வரை திறந்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ....இல்லையேல் அரும்பாடு பட்டு திருப்பணி செய்த பலன் கிடைக்காமல் போய்விடும் ....

நாங்கள் சென்ற போதும் திருக்கோயில் பூட்டியே இருந்தது ...பட்டீஸ்வரத்தில் உள்ள குருக்கள் வீடு சென்று அழைத்தோம் ..கனிவுடன் வந்து எங்களுக்கு தரிசனம் செய்ய உதவினார் .....அவருக்கு மிக்க நன்றி ..

பெயர் பலகை ஒன்று அவசியம் வைக்கப்பட வேண்டும் .

கருவறையில் கருணையே வடிவாக குடியிருக்கும் இறைவனை காணும்போது நம் மனதில் ஏற்படும் உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை .....

அன்பர்களே .....அனைவரும் சென்று தரிசியுங்கள் 
பக்தர்கள் வருகையின்மையால் தான் பெரும்பாலான திருக்கோயில்கள் பூட்டியே உள்ளன ...ஜன சந்தடி மிகுந்த நகரத்தில் உள்ள திருக்கோயில்களை மட்டுமே தரிசிப்பதை சற்று குறைத்து கிராமங்களில் உள்ள இத்தகைய திருக்கோயில்களையும் தரிசனம் செய்யுங்கள் ..

இவ்விடங்களில்  மட்டுமே இறைவன் விஸ்ராந்தியாக ,நம் குறைகளை களைவதற்கு ஏதுவாக வீற்றிருக்கிறார் .





Tuesday, October 23, 2018

நின் கடன் அடியேனையும் தாங்குதல்.....
என் கடன் பணி  செய்து கிடப்பதே .......

என்னும் வாக்கிற்கு இணங்க அரன் திருப்பணிக்கு தங்கள் நேரத்தை,வாழ்க்கையை  அர்ப்பணித்தவரா நீங்கள்?

அப்படியெனில்

ஆனைக்கோயில் அரனுக்கு ஆவுடையார் அமைத்து தரவிருக்கும் அதிருஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவராக இருக்கலாம் ....

அரன் அருளை பெற ஏற்ற தருணம் இதுவே ......
எங்குள்ளது ......? 
திருக்கோயில்கள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் உள்ள ஆத்தூர் (இது சப்த சிவ ஷேத்திரமாகும்) என்னும் இடத்திலிருந்து பாலாற்றங்ககரை பாலம் தாண்டியவுடன் வரும் கிராமம் திருஆனைக்கோவில் ..

இங்கு வானமே கூரையாக பல ஆண்டுகளாக பாண வடிவில் கோயில் கொண்டருளும் இப்பெருமானை ஆவுடையார் அமைத்து முறைப்படி பிரதிஷ்டை செய்து வழிபாட்டிற்கு கொண்டு வர ,அன்பர்கள் பெரும் முயற்சி செய்து வருகிறார்கள் ....

விரைவில் மேற்கூரையும் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது ..

இப்பெருமான் நம் திருமயிலை கபாலீஸ்வரரை ஒத்த ஆகிருதியான (பருத்த) வடிவினராக விளங்குகிறார் ..இவருக்கு தகுந்த ஆவுடையார் செய்வதற்கு 27,000 ருபாய் நிதி உதவி தேவைப்படுகிறது ..
பக்தர்கள் அளிக்கும் நிதி உதவியை கொண்டே இத்திருப்பணி நிறைவேற்றப்பட வேண்டும் .
இப்பணியினை ஏற்றிருக்கும் ஸ்தபதி திரு அழகேசன் (7200905022) அவர்களை நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் .....
அல்லது அடியார் திரு பாலா 9941045123....
அல்லது கோட்செங்கட்சோழன் சிவ சபை திருப்பணி மன்றத்தின் நிறுவனரான திரு சிவ.த. வெங்கடேசன் 94443528848/9677226260 என்ற அலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு உங்கள் உதவியை நல்கலாம் .
விரைவில் திருக்கோயில் கட்டப்பட்டு அன்னாபிஷேகமும் இவர் காண வேண்டும் என்பதே இறைஅன்பர்களின் 
தீவிர விருப்பம் ஆகும்.