Tuesday, October 23, 2018

நின் கடன் அடியேனையும் தாங்குதல்.....
என் கடன் பணி  செய்து கிடப்பதே .......

என்னும் வாக்கிற்கு இணங்க அரன் திருப்பணிக்கு தங்கள் நேரத்தை,வாழ்க்கையை  அர்ப்பணித்தவரா நீங்கள்?

அப்படியெனில்

ஆனைக்கோயில் அரனுக்கு ஆவுடையார் அமைத்து தரவிருக்கும் அதிருஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவராக இருக்கலாம் ....

அரன் அருளை பெற ஏற்ற தருணம் இதுவே ......
எங்குள்ளது ......? 
திருக்கோயில்கள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் உள்ள ஆத்தூர் (இது சப்த சிவ ஷேத்திரமாகும்) என்னும் இடத்திலிருந்து பாலாற்றங்ககரை பாலம் தாண்டியவுடன் வரும் கிராமம் திருஆனைக்கோவில் ..

இங்கு வானமே கூரையாக பல ஆண்டுகளாக பாண வடிவில் கோயில் கொண்டருளும் இப்பெருமானை ஆவுடையார் அமைத்து முறைப்படி பிரதிஷ்டை செய்து வழிபாட்டிற்கு கொண்டு வர ,அன்பர்கள் பெரும் முயற்சி செய்து வருகிறார்கள் ....

விரைவில் மேற்கூரையும் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது ..

இப்பெருமான் நம் திருமயிலை கபாலீஸ்வரரை ஒத்த ஆகிருதியான (பருத்த) வடிவினராக விளங்குகிறார் ..இவருக்கு தகுந்த ஆவுடையார் செய்வதற்கு 27,000 ருபாய் நிதி உதவி தேவைப்படுகிறது ..
பக்தர்கள் அளிக்கும் நிதி உதவியை கொண்டே இத்திருப்பணி நிறைவேற்றப்பட வேண்டும் .
இப்பணியினை ஏற்றிருக்கும் ஸ்தபதி திரு அழகேசன் (7200905022) அவர்களை நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் .....
அல்லது அடியார் திரு பாலா 9941045123....
அல்லது கோட்செங்கட்சோழன் சிவ சபை திருப்பணி மன்றத்தின் நிறுவனரான திரு சிவ.த. வெங்கடேசன் 94443528848/9677226260 என்ற அலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு உங்கள் உதவியை நல்கலாம் .
விரைவில் திருக்கோயில் கட்டப்பட்டு அன்னாபிஷேகமும் இவர் காண வேண்டும் என்பதே இறைஅன்பர்களின் 
தீவிர விருப்பம் ஆகும்.




No comments:

Post a Comment