Saturday, August 18, 2018

அன்பர்களே......பூர்வ ஜென்ம புண்ணியம் என்கிறார்களே அதை எளிதில் எப்படி அடைவது?

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ....என்பார் மாணிக்கவாசகர் 
அவனுடைய திருக்கோயில் திருப்பணிக்கு உதவுவதற்கும்  அவன் அருள் கண்டிப்பாக வேண்டும் ...

சிவ  திருப்பணிக்கென ஒரு செங்கல்லை வழங்கினாலே நம் பல தலைமுறையினர்இவையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து பின்  கைலாயத்தில் நித்ய வாசம் செய்யும் பேற்றினையும் பெறுவர்   என்பது திண்ணம் ....

நம் நாட்டை ஆண்ட மாமன்னர்கள் அதனாலேயே பற்பல கற்கோயில்களை கட்டினார்கள் 
அவை இன்றும் கம்பீரமாக எழுந்து நின்று அவர்களின் பெயரை உலகறிய செய்து கொண்டிருக்கின்றன ....

அப்படிப்பட்ட ஒரு பூர்வஜென்ம பாக்கியத்தை நாம் எளிதில் அடைய சந்தர்ப்பம் ஒன்று வந்துள்ளது 
அன்பர்களே பயன் படுத்தி கொள்ளுங்கள் ......

வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் வேலூர் பாளையம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பிரம்மேஸ்வர் ஆலய திருப்பணிக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் ..மிகவும் சிரமப்பட்டு திருப்பணியை நிறைவேற்றி 
உள்ளனர் எனினும் எஞ்சிய திருப்பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கு நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் கிராம மக்கள் .....

கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்து விட்ட போதிலும், குறித்த நேரத்தில் பணிகள் முடியாமல் பொருளாதார பற்றாக்குறையினால் தடைபட்டுள்ளது ..

எத்தனை சிறிய உதவியானாலும் அன்பர்களே அவை சிறு துளி பெரு வெள்ளமாக பெருகும் இறைவன் அருளால் ....

இத்தகைய அரிய திருப்பணியில் ஈடுபட்டிருக்கும் அன்பர்கள் பெரும் செல்வச்செழிப்பில் திளைப்பவர்கள் அல்லர் ..  அன்பர்களே.... அவர்கள் மிகவும் எளிய வாழ்க்கையை நடத்துபவர்கள் தாம் ...

அவர்களுக்கு உதவுவது ஒன்றே பல பிறவிகளில் நாம் சேர்த்து வைக்கப்போகும் பூர்வஜென்ம புண்ணியம் ...

அவர்களது அலைபேசி எண்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களில் உள்ளது ...அன்பர்களே அவற்றை கிளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கலாம் .






Tuesday, August 14, 2018

விஷ கடிகளால் மரணம் .....விஷ ஜுரங்களால் வேதனை .....இங்கு அறவே இல்லை ......

ஆம் அன்பர்களே .....சூரியன் வழிபட்ட (பரிதி என்றால் சூரியன்)திரு பரிதியூர் எனப்படும் பருத்தியூர் என்னும் தலத்தில் தான் இத்தகைய சிறப்பு ....
இங்கு கோயில் கொண்டு அருளும் அன்னை பிரசன்ன  பார்வதி சமேத  விஷஹரேஸ்வரர் இத்தகைய சிறப்பை அருள்பவர் ...
இங்கு வசிப்பவர்களை விஷ ஜந்துக்கள் தீண்டுவதில்லை ......விஷ ஜுரங்கள் பாதிப்பதில்லை என கூறுகிறார்கள் ......இங்கு வந்து தரிசிப்பவர்களுக்கும் இதே விதி பொருந்தும் .....

எங்குள்ளது ?

திருவாரூர் மாவட்டம் குடந்தை நன்னிலம் சாலையில் அமைந்துள்ளது இந்த சின்னஞ்சிறு கிராமம் ..விவசாயம் பிரதான தொழில் .....
அருகில் புகழ்பெற்ற ஸ்ரீ வாஞ்சியம் திருத்தலம் .அமைந்துள்ளது  ..
ஆவணம் பருத்தியூர் என அழைக்கப்படும் இத்தலம் திருநல்லகூரூர் (கூகூர்)என வழங்கப்படும் தேவார  வைப்பு  தலம் அருகில் பிலாவடி தாண்டியதும், வருகிறது ....
பேருந்து நிறுத்தத்திலிருந்து சற்று தொலைவில் திருக்கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகிறது 

புராண வரலாறு 

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது தோன்றிய ஆலகால விஷம் சூரியனையும் விட்டுவைக்கவில்லை ....ஆம்!  சூரியன் தன் அழகையும் ஆற்றலையும் இழந்து மெலிந்தான் ....
ஈசனை சரணடைந்தான் .பின் இறைவன் கட்டளைப்படி இத்தலத்திற்கு வந்து தீர்த்தம் உருவாக்கி பலகாலம் தவமிருந்து இங்கு சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள இறைவன் அருளால் இழந்த தன் ஆற்றலை திரும்ப பெற்றதாக வரலாறு .

எனவே இறைவன் திருநாமம் விஷ ஹரேஸ்வரர் என வழங்கப்படுகிறது ....
பின்னர் ஆண்ட மன்னர்களால் திருக்கோயில் கட்டப்பட்டு , பின் ஆண்டுகள் செல்ல செல்ல சிதிலமடைந்து ,  தற்போது ஆன்மீக அன்பர்களின் பெரு முயற்சியால் திருக்கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது ....

அன்பர்களே பரிதி வழிபட்ட இப்பெருமானை நீங்கள் தரிசித்து நோய் இல்லா பெருவாழ்வு பெறுங்கள் ....அருகில் ஆவணம் ,ஸ்ரீவாஞ்சியம் போன்ற ஏராளமான தலங்கள் உள்ளன .
ஆலய அர்ச்சகர் அலைபேசி எண் தந்துள்ளேன் ...அவரை தொடர்பு கொண்டு திருக்கோயிலை நீங்கள் தரிசனம் செய்யலாம் .

அரும்பாடு பட்டு புராதன திருக்கோயில்களை புனரமைப்பது நம் நலத்திற்காகவே ....எனவே ஸ்ரீவாஞ்சியம் மற்றும் நவகிரக யாத்திரை செல்பவர்கள் தவறாமல் இத்தலத்திற்கு வந்து தரிசனம் செய்யுங்கள் ....இறைவன் அருள் பெற்று செல்லுங்கள் 

அர்ச்சகர் திரு ராஜப்பா குருக்கள் 

அலைபேசி எண் 9943343031





Monday, August 6, 2018


உத்தர்கண்ட் மாநிலம் டேராடூன் 
லக மண்டல்  .
திருக்கோயில்கள் 


காண முடியுமா இத்தகைய அரிய காட்சியை? 
கிடைத்தவர்கள் பல பிறவிகளில் கொடுத்து வைத்தவர்கள்!!

உத்தர்கண்ட் மாநிலம் , டேராடூன் மாவட்டம் ,லக மண்டல்  , முசெளரி ---யமுனோத்ரி வழித்தடத்தில் இருக்கும் புராதன பெருமை வாய்ந்த சிவஸ்தலம்.

தலைநகர் டேராடூன் நகரிலிருந்து 125 கிலோமீட்டரில் அமைந்துள்ளது .அழகிய மலைகள் சூழ அமைந்துள்ளது ...
சிறிதும் பெரிதுமாக லக்க்ஷம் லிங்கங்களை கொண்டது இத்திருக்கோயில் ....
லக மண்டல் என்றால் லக்க்ஷம் திருக்கோயில்கள் அல்லது லக்க்ஷம் சிவலிங்கங்கள் என பொருள்படும் .....


தற்போது அவ்வளவு இல்லை எனினும் பாண்டவர்கள் காலத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது ...

பாண்டவர்கள் வனவாசத்தின் போது பல நாட்கள் இவ்விடம் தங்கியிருந்ததாக வரலாறு கூறுகிறது.


அரக்கு மாளிகையில் தீ வைக்கப்பட்டு,துரியோதனாதிகளிடமிருந்து தப்பித்த பாண்டவர்கள், இவிடம் தங்கி பல சிவ மூர்த்தங்களை அமைத்து வழிபட்டுள்ளனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரகண்ட் மாநிலத்தின் 
லக மண்டல்திருகோயில்.
பல பெருமை வாய்ந்த முற்றுப்பெறாத தலங்கள் இங்கு உண்டு. கண்ணாடியின் வழவழைப்பை மிஞ்சும் இறைவனின் திருமேனியை பாருங்கள்.

மேலும் ஒரு தல புராணமும் நிலவுகிறது .....பிரம்மனும் விஷ்ணுவும் தமக்குள் யார் பெரியவர் என சண்டையிட்ட பொது மிகப்பெரிய ஜோதி பிழம்பாய் , அடிமுடி காண இயலாதவராய் இருவருக்கும் நடுவில் எழுந்தருளியதாக 
அப்போது பிரம்மன் விஷ்ணு இருவரும் இங்கு இறைவனை ஸ்தாபித்து வழிபட்டதாகவும் வரலாறுள்ளது ..

அவரே மஹா மண்டலேஸ்வர் என்னும் பெயரில் எழுந்தருளியுள்ளார் ...

இப்பதிவை கண்ணுறும் அன்பர்கள் எவரேனும் ஒருவராவது இத்தலத்திற்கு சென்று வழிபடுவராயின் அளவற்ற மகிழ்ச்சியை அடைவேன்.

ஹரித்துவார் நகரிலிருந்து 165 கிலோமீட்டரிலும் , ரிஷிகேஷிலிருந்து 151 கிலோமீட்டரிலும் இத்தலம் அமைந்துள்ளது 

Location: on Mussoorie – Yamnotri motor able road, about 5kms ahead of Bernigad