Monday, August 6, 2018


உத்தர்கண்ட் மாநிலம் டேராடூன் 
லக மண்டல்  .
திருக்கோயில்கள் 


காண முடியுமா இத்தகைய அரிய காட்சியை? 
கிடைத்தவர்கள் பல பிறவிகளில் கொடுத்து வைத்தவர்கள்!!

உத்தர்கண்ட் மாநிலம் , டேராடூன் மாவட்டம் ,லக மண்டல்  , முசெளரி ---யமுனோத்ரி வழித்தடத்தில் இருக்கும் புராதன பெருமை வாய்ந்த சிவஸ்தலம்.

தலைநகர் டேராடூன் நகரிலிருந்து 125 கிலோமீட்டரில் அமைந்துள்ளது .அழகிய மலைகள் சூழ அமைந்துள்ளது ...
சிறிதும் பெரிதுமாக லக்க்ஷம் லிங்கங்களை கொண்டது இத்திருக்கோயில் ....
லக மண்டல் என்றால் லக்க்ஷம் திருக்கோயில்கள் அல்லது லக்க்ஷம் சிவலிங்கங்கள் என பொருள்படும் .....


தற்போது அவ்வளவு இல்லை எனினும் பாண்டவர்கள் காலத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது ...

பாண்டவர்கள் வனவாசத்தின் போது பல நாட்கள் இவ்விடம் தங்கியிருந்ததாக வரலாறு கூறுகிறது.


அரக்கு மாளிகையில் தீ வைக்கப்பட்டு,துரியோதனாதிகளிடமிருந்து தப்பித்த பாண்டவர்கள், இவிடம் தங்கி பல சிவ மூர்த்தங்களை அமைத்து வழிபட்டுள்ளனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரகண்ட் மாநிலத்தின் 
லக மண்டல்திருகோயில்.
பல பெருமை வாய்ந்த முற்றுப்பெறாத தலங்கள் இங்கு உண்டு. கண்ணாடியின் வழவழைப்பை மிஞ்சும் இறைவனின் திருமேனியை பாருங்கள்.

மேலும் ஒரு தல புராணமும் நிலவுகிறது .....பிரம்மனும் விஷ்ணுவும் தமக்குள் யார் பெரியவர் என சண்டையிட்ட பொது மிகப்பெரிய ஜோதி பிழம்பாய் , அடிமுடி காண இயலாதவராய் இருவருக்கும் நடுவில் எழுந்தருளியதாக 
அப்போது பிரம்மன் விஷ்ணு இருவரும் இங்கு இறைவனை ஸ்தாபித்து வழிபட்டதாகவும் வரலாறுள்ளது ..

அவரே மஹா மண்டலேஸ்வர் என்னும் பெயரில் எழுந்தருளியுள்ளார் ...

இப்பதிவை கண்ணுறும் அன்பர்கள் எவரேனும் ஒருவராவது இத்தலத்திற்கு சென்று வழிபடுவராயின் அளவற்ற மகிழ்ச்சியை அடைவேன்.

ஹரித்துவார் நகரிலிருந்து 165 கிலோமீட்டரிலும் , ரிஷிகேஷிலிருந்து 151 கிலோமீட்டரிலும் இத்தலம் அமைந்துள்ளது 

Location: on Mussoorie – Yamnotri motor able road, about 5kms ahead of Bernigad









No comments:

Post a Comment