Monday, May 29, 2017

மாதரசி வழிபட்ட மகாதேவன் 

கைலாசமுடையார் திருகோயில் , செம்பியன் மாதேவி , நாகை .மாவட்டம் .

செம்பியன் மாதேவி ,சோழ சாம்ராஜ்ஜியத்தின் பேரரசி, கண்டராதித்த சோழனின் மனைவி , ராஜ ராஜ சோழனின் அத்தை யாவார்.
இளம் வயதிலேயே விதவையான இவர் கலைகளை மிகவும் ரசிப்பவர். 

வாழ்நாளில் பெரும்பகுதியை திருகோயில் திருப்பணிகளுக்காக ஒதுக்கினார் . இவர் கட்டிய கைலாசமுடையார் திருகோயில் இவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது . 

கண்டராதித்த சோழன் நான்கே ஆண்டுகள் அரசாட்சி புரிந்தாலும் , ஈடு இணையற்ற சிவ பக்தி உடையவராக  திகழ்ந்தார். பல்வேறு திருக்கோயில்கள் இவர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டன ...
அன்றைய காலத்தில் எவ்வளவு பெரிய மாமன்னராக  இருந்தாலும், இறைவனிடத்தே அளப்பரிய பக்தி கொண்டிருந்தனர். இறைபக்தியே, அவர்கள் தன்னலமற்ற அரசாட்சி  புரிவதற்கும் எண்ணற்ற ஆலயங்களை நிர்மாணிப்பதற்கும் காரணமாக இருந்தன. 

 மன்னர்கள் மட்டுமல்ல, அவர்களின் இல்லத்தரசிகளும்  ஏராளமான  திருக்கோயில்களை எழுப்பியும், புதுப்பித்தும் திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். 

அவர்களுள்  மாதரசியான , செம்பியன் மாதேவி செய்துள்ள திருப்பணிகள் குறிப்பிட தகுந்தவை .....
செங்கற்களால் ஆனா பல திருகோயில்கள் அவரால் தான் கற்றளியாக மாற்றப்பட்டன ..

கோயிலை காட்டியதோடு நில்லாமல் ஏராளமான  மானியங்களையம்  பராமரிப்பிற்கென வழங்கியுள்ளார் 

திருவாரூர் அறநெறி, திருமுதுகுன்றம், திருநல்லம், திருமணஞ்சேரி, திருவக்கரை, திருச்சேலூர், திருத்துருத்தி, தென்குரங்காடுதுறை, திருக்கோடிக்கா, ஆனாங்கூர், திருத்துருத்தி, குத்தாலம் போன்ற தலங்களில் செங்கற்தளிகளாக இருந்த கோயில்களை கற்றளிகளாக எழுப்பி, திருப்பணிகள் செய்திருக்கிறார்.

இவரின் சிவபக்திக்கு சான்றாக இவர் கட்டிய பிரம்மாண்டமான கைலாசமுடையார் திருக்கோயில் இன்றும் நாகை மாவட்டத்தில் உள்ளது ...
வேத மந்திரங்களும் , திருவிழாக்களும் பூசைகளும்  சதா சர்வ காலமும் நிறைந்திருந்த இத்திருக்கோயில் பல்வேறு காரணங்களினால்  இன்று தன்  பொலிவை இழந்து , சீர்குலைய தொடங்கியது .....புதர்கள் மண்டி பார்க்கவே பரிதாபமாக விளங்கிய இத்திருக்கோயிலை கண்டு சகிக்காத கிராம மக்கள் திருப்பணியை தொடங்கியுள்ளனர் .


இந்து அறநிலைய துறை சார்பில் சில திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன என்றாலும் பிரம்மாண்டமான இத்திருக்கோயிலுக்கு அது கண்டிப்பாக போதுமானதாக இல்லை ....

அன்பர்களே பிரம்மாண்டமான திருக்கோயில் ..
ஏழை கிராம மக்களால் என்ன செய்ய இயலும் ? 
ஒன்றிணைந்து மீட்டெடுப்போம் வாருங்கள் மகேசன் திருக்கோயிலை ....
சோழ பேரரசியின் ஆன்மாவை மனம் குளிர செய்வோம் ....

வங்கி கணக்கு விபரங்கள் இதோ உங்களுக்காக :


உங்கள் கவனத்துக்கு

தலம்:      
செம்பியன்மாதேவி

இறைவன்: 
 ஸ்ரீகயிலாசநாதர்

இறைவி:
    
ஸ்ரீபெரியநாயகி

தீர்த்தம்:  
   
நான்மறை புஷ்கரணி

தலவிருட்சம்: 
அரசமரம்

திருவிழாக்கள்: 
சித்திரைத் திருவிழா, ஆனித் திருமஞ்சனம், சித்திரை கேட்டை நட்சத்திரத்தில் செம்பியன்மாதேவி பிறந்த நாள் என்று பல விழாக்கள் நடைபெறுகின்றன.

எப்படிச் செல்வது:  நாகப்பட்டினத்தில் இருந்து பாலக்குறிச்சி செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது செம்பியன்மாதேவி. செம்பியன்மாதேவி பிள்ளையார்கோயில் பஸ் நிறுத்தத்தில் இறங்கினால், அருகிலேயே கோயிலை தரிசிக்கலாம். நாகப்பட்டினத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு.

வங்கிக் கணக்கு விவரம்:

Account Holder(s) Name:
 N. Gnanasabapathi / G. Thirumalaisamy Punjab National Bank SembianMahadeviBranch 

Account Number     : 2842002100001026

IFSC Code:
           PUNB0284200

தொடர்புக்கு: குருமூர்த்தி, 9047743903.




.

Wednesday, May 24, 2017

இல்லாள் வருவாள் ......நல்லறம்   சிறக்க ......⧭
அன்பர்களே , இல்வாழ்க்கை துணை அமையும் இனிய நேரம் வரவில்லையா?
பரிகாரங்கள் பல செய்தும் பலனில்லையா ? கவலை வேண்டாம் !!
கையில் வெண்ணை இருக்க நெய்க்கு அலைவானேன் ?

வாருங்கள் திருமண மங்கலம் திருத்தலத்திற்கு . எங்கே உள்ளது இத்தலம் ?
குரு பகவான் அருள்புரியும் ஆலங்குடிக்கு வெகு அருகில் , நடை பயண தூரம் தான் .

இங்கு தான் ஆலங்குடி ஆபத்சஹாயேஸ்வர சுவாமிக்கும் , ஏலவார்குழலி அம்மைக்கும் திருமணம் நடை பெற்றது . இன்றும் பிரம்மோஸ்தவத்தின் போது , இறைவனின் திருமண உத்சவம் இங்கு தான் நடைபெறுகிறது . எனவே தான் இத்தலம் திருமண மங்கலம் (தற்போது திருவோண மங்கலம் ) என்று
அழைகப்படுகிறது .

மேலும் , மயானத்திற்கு நேர் எதிர் உள்ள வெகு சில தலங்களுள் இதுவும் ஒன்று . எனவே சிறந்த பரிகார தலமாக இது விளங்குகிறது . திருமண தடைக்கு இது மிக சிறந்த பரிகார தலம் .

இங்கு வந்து இறைவனை உளமார வழிபட திருமணம் உறுதி . இத்தனை சிறப்புகள் இருந்தும் அதிகம் அறியபடாத தலமாகவே இது இருந்து வருகிறது .

ஆலங்குடி குரு கோவிலின் வாசலிலேயே , இத்திருகோயிலின் அர்ச்சகர் வீடு உள்ளது .

அவரை கையோடு அழைத்து சென்று தரிசனம் செய்யலாம் .

படத்தில் இறைவன் விசாலேஸ்வரர் 




Tuesday, May 23, 2017

⧭ குன்றாத வளம் பல நல்கும் குன்னியூர் சிவாலயம்  ⧭

இறைவன் திருப்பெயர் விஸ்வநாதர் இறைவி விசாலாக்ஷி 
அன்பர்களே திருவாரூர் திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் ஏராளமான புராதனமான திருக்கோயில்கள் அமைந்துள்ளன ....
அவற்றுள் மிக புராதனமானதும் சக்தி வாய்ந்ததும் ஆன  குன்னியூர் சிவாலயம் பிரதான சாலையின் ஓரத்திலேயே அழகுற அமைந்துள்ளது ....

முன்புறம் சிறிய நந்தவனத்துடன் கூடிய சிறப்பாக பராமரிக்கப்படும் திருக்கோயில் ....
கருவறையில் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தியுடன் வீற்றிருக்கிறார் இப்பெருமான் ....
ஆம்! இவரை வழிபடுவதால் குறையாத நலம் பல விளையும் ...செல்வ வளம் பெருகும் ..
வறுமை விட்டொழியும் ...முக்தி கிட்டும் ....
 விஸ்தாரணமான முன்மண்டபத்தில் வலப்புறம் பெரிய திருமேனியாக ஒரு லிங்கம் காணப்படுகிறது ..
ஒரே சுற்றுடன் விளங்கும் இத்திருக்கோயிலில் சிவாலயத்திற்குரிய அனைத்து விசேஷங்களும் முறையாக 
நடைபெறுகிறது .......தூய்மையான திருக்கோயில் ....சுற்றிலும் ஏராளமான பாடல் பெற்ற தலங்கள் சூழ விளங்கும் இந்த திருக்கோயிலை ஒருமுறை சென்று தரிசனம் செய்யுங்களேன் ......

அமைவிடம் :  திருவாரூர்----திருத்துறைப்பூண்டி சாலையில் திருவாரூரிலிருந்து ஏறத்தாழ 15 கிலோமீட்டர் ...