Friday, March 13, 2020

மாங்கல்ய பலம் என்றென்றும் நிலைத்திருக்க .....

நீடித்த மாங்கல்ய பலத்திற்கும் , நிலையான திருமண நல்வாழ்விற்கும் மிகசிறந்த பரிகார தலம் நம் நாகை மாவட்டத்தில் உள்ளது .....

ஆம் அன்பர்களே திருமங்கலம் பூலோகநாயகி சமேத பூலோகநாதர் திருக்கோயில்தான் அது .

திருமங்கலம் என்ற பெயரில் ஏராளமான ஊர்கள் உள்ளன. இத்திருமங்கலம் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் குத்தாலம் வட்டத்தில் புகழ் பெற்ற திருமணஞ்சேரி அருகில் உள்ளது .

எண்ணற்ற திருத்தலங்கள் சூழ இத்தலம் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது .திருவேள்விக்குடி, திருமணஞ்சேரி ,மேலை திருமணஞ்சேரி ,குத்தாலம் போன்ற தேவார பாடல் பெற்ற தலங்களும் இதில் அடங்கும் ....

அங்கெல்லாம் செல்லும் அன்பர்கள் திருமங்கலம் பூலோகநாதரையும் தரிசித்து அருள்பெருங்கள் .

ஏனெனில் இத்தலத்தின் மகிமையும் புராதன பெருமையும் அளவிடற்கரியது .கிடைத்தறிய இத்தலத்தில் தான் குபேரன் திருமாங்கல்யத்திற்க்காக  மஹாலஷ்மியிடமிருந்து பொன் பெற்றதாக ஐதீகம் ....அருகில் அமைந்துள்ள பொன்னுர் என்னும் கிராமம் இதனை உறுதி செய்கிறது .

வேள்வி நடந்த இடம் வேள்விக்குடி ...திருமணம் நடைபெற்றது திருமணஞ்சேரி என அருகருகில் அமைந்துள்ள அனைத்து திருக்கோயில்களுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை .

கடுமையான திருமண தோஷம் உடையவர்கள் இங்கு ஒரு சிவராத்திரி தினத்தன்று வந்து முதல் ஜாமத்தில் இப்பெருமானையும் இரண்டாம் ஜாமத்தில் மாங்குடி சிவலோகநாதரையும் மூன்றாம் ஜாமத்தில் பொய்கைக்குடி நாகநாதரையும் வணங்கி பின் மறுபடியும் நான்காம் ஜாமத்தில் இப்பெருமானை வணங்கி நிறைவு செய்ய , உடன் 
திருமணம் கைகூடும் 

அதுமட்டுமல்ல அன்பர்களே, ஆயுள் விருத்தி தலமாகவும் இத்தலம் விளங்குகிறது ...இங்கு வசிஷ்டருக்கு இறைவன் காலசம்ஹார மூர்த்தியாக தரிசனம் அளித்து , இங்கு வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுள் பலத்தையும் அளிக்கிறார்.எனவே இங்கு சஷ்டியப்த பூர்த்தி , சதாபிஷேக ஹோமங்களை செய்து கொள்வது மிகுந்த நன்மையை தரும்.

மற்றுமோர் சிறப்பம்சம் இங்குள்ளது ....வேறெங்கும் காணமுடியாத வகையில் இத்தலத்தில் முருகப்பெருமான் ப்ரம்ம சாஸ்தா வடிவத்தில் வீற்றிருக்கிறார் ...சிறந்த அறிவாற்றல், நல்ல கல்வி தகுதிக்காக இவரை நாம் வழிபடலாம் ...
வசிஷ்டர் தன் மனைவி அருந்ததியோடு தம்பதி சமேதராக மிருத்யுஞ்ச ஹோமம் புரிந்த தலம் ஆகையால் இங்கு வந்து வணங்கும் பெண்கள் மாங்கல்ய பலம் கூடும் ..
காண்பதற்கரிய இத்தலத்தை அன்பர்கள்தவற விடாமல்  வாழ்வில் ஒரு முறையேனும் வணங்கி இறையருள் பெறுங்கள் .

ஆலய அர்ச்சகர் திரு மோகன் அவர்கள் 

அலைபேசி எண் :9486181657
திருப்பணிக்கு முன்னர் எடுக்கப்பட்ட புடைபடங்கள் 






Thursday, March 12, 2020

புராதனமான இத்தலத்தை தரிசித்தால் கொரானாவும் தலைதெறித்து ஓடும் ...

முத்தான இரு திருக்கோயில்கள் ....முத்தே சிவலிங்கங்களாக மாறிய திருக்கோயில் 
அவ்வாறு தெறிக்க ஆடிய ஆலங்காடு தலத்துடன் தொடர்புடைய திருக்கோயில் ..

தூசு இல்லை ...காற்று மாசு இல்லை ....ஜன நெரிசல் இல்லை 
மாஸ்க் அணியாமல் தைரியமாக சென்று வரலாம் வாருங்கள்,
அழைத்து செல்கிறேன் ....


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருவாலங்காடு திருத்தலம் நம்மில் பலரும் அறிந்ததே ....
இங்கு இறைவன் ஆடிய இரத்தின சபை பஞ்ச சபைகளில் முதன்மையானது ....ஆனால் பலரும் அறியாதது 
இத்தலத்தை சுற்றிலும் ஏராளமான இத்தலத்துடன் தொடர்புடைய திருக்கோயில்கள் உள்ளன.
அவற்றையும் அன்பர்கள் தரிசித்து பலன் பெற வேண்டும் ...
ஒரே தலத்தையே  தரிசித்திராமல் , பழமையும் புராதன பெருமையும் ஒருங்கே கொண்டுள்ள கிராமபுரங்களில்  உள்ள இத்தகைய  திருத்தலங்களை தரிசிக்கும்போது கிடைக்கும் மன நிறைவு ,ஆத்ம திருப்த்தி வேறெதிலும் கிடைப்பதில்லை 
அன்பர்களே ....,
அத்தகைய ஒரு திருக்கோயில் தான் திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் , மப்பேடு அடுத்த முதுகூர் என்னும் திருத்தலமாகும் 

ஒன்றல்ல இரண்டு திருக்கோயில்கள் இத்தலத்தில் உள்ளன.
திருப்பணி செய்யப்பட்டு பேரழகுடன் விளங்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் .மற்றும் முத்தீஸ்வரர் திருக்கோயில் இக்கிராமத்திற்கு அழகு சேர்க்கிறது .சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வேறெங்கும் காண முடியாத0 ஓர் அதிசயம்  வைணவ புருஷர் ஸ்ரீமன் ராமானுஜருக்கு தனி சந்நிதி அமைந்திருப்பதே ...சைவ  வைணவ ஓற்றுமைக்கு இது ஒரு உதாரணமாகும் மிகுந்த ஈர்ப்புடன் இவரது சிலா ரூபம் உள்ளது ..

இத்திருக்கோயிலிருந்து சற்று தள்ளி ஊருக்கு ஒதுக்குபுறமாக முத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது .அற்புதமான பெரிய திருமேனி காண்போரை பரவசப்படுத்தும் ...சிறிய இருக்கோயில் என்றாலும் , விஸ்தரிக்க முயற்சி மேற்கொடுள்ளனர் அன்பர்கள் ..


எங்குள்ளது ?

திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லையாகும் முதுகூர் ....
பூந்தமல்லியிலிருந்து தக்கோலம் செல்லும் பேருந்துகள் மப்பேடு செல்கின்றன .அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இக்கிராமம் ....
பேரம்பாக்கம் வழியாகவும் வரலாம் ...



முத்தீஸ்வரர் திருக்கோயில் 

சுந்தரேச பெருமான் முன்பிருந்த நிலை 


Monday, March 9, 2020

யார் சீரழித்தால் என்ன? நாம் சீரமைப்போம் வாருங்கள் !!!!!

ஆலயம் தொழுவது சாலவும் நன்று .....

நம் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் ஊற்றுக்கண்ணாக விளங்கும் திருக்கோயில்களை காப்பது நம் புனிதமான கடமைகளில் ஒன்று ....

அப்படி கஜா புயலின் காரணமாக 3 வருடத்திற்கு முன் நின்று போன திருப்பணி வேலைகளை மீண்டும் துவங்கியிருக்கும் ஓம்காரம் இறைபணி மன்றத்தினருக்கு உதவிட உங்களை அன்புடன் அழைக்கிறோம் ...

ஆப்பரக்குடி அமிர்தலிங்கேஸ்வர் திருக்கோயில் 

திருவாரூர் மாவட்டம் , திருத்துறைப்பூண்டி வட்டம் , கச்சனம் அருகே உள்ளது இச்சிறிய கிராமம் .மிகவும் சிதைத்து போன இத்திருக்கோயிலைபுனரமைக்க  தற்போது அன்பர்கள் பெரும்முயற்சியுடன் களமிறங்கி உள்ளனர் .

அன்பர்களே ...ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும் .

செயற்கரிய இறைப்பணியில் ஈடுபடும் அன்பர்கள் டாடாவோ , பிர்லாவோ அல்லர் ....மிக சாமானியர்கள் தான் இத்தகைய பணியில் ஈடுபட முற்படுகின்றனர் ..அவர் கரங்களுக்கு வலு சேர்க்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும் ...

தற்போது சுவாமி விமான வேலைகளும் , அம்பாள்  சன்னதி புதிதாக அமைக்கவும் மணல் , செங்கல் சிமென்ட் மற்றும் ஸ்தபதியார் சம்பளத்திற்கும் பொருளுதவி தேவைப்படுகிறது ....

ஒரு சிவாலயத்தை சீரமைப்பது என்பது ,பல ஜென்மங்களில் நாம் செய்த புண்ணிய பலன்களால் கிடைப்பது .இதனை நாம் இழந்துவிட கூடாது ...

அலைபேசி எண் தந்துள்ளேன் ...
ஓம்காரம் இறைபணி மன்றம்.. 9095265980

அழையுங்கள் ....உங்களால் இயன்றதை வழங்குங்கள் ..
இயன்றதை செய்வோம் இல்லாத ஆலயங்களுக்கு .....



இத்திருக்கோயிலின் முந்தைய நிலை 



Sunday, March 8, 2020

அண்டம் போற்றும் தண்டந்தோட்டத்து தயாபரன்.

➲அகத்தியருக்கு திருமணகாட்சி கொடுத்த இடம் .
➲முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தன் திருநடன காட்சி அருளிய தலம்.
➲தன் தந்தையின் காலிலிருந்து கழண்ட மணியை கண்டெடுத்து, பின் காலில் கட்டிவிட்டு 'மணி கட்டிய 'பிள்ளயார் எழுந்தருளியிருக்கும் தலம்.
➲திருமண தடை அகற்றும் தலம்.
➲சஷ்டியப்த பூர்த்தி , ஆயுஷ் ஹோமம் , பீமரத சாந்தி ,சதாபிஷேகம் போன்றவை இங்கு இத்தலத்தில் செய்து கொள்வதால் ஆயுள் விருத்தி கூடும் ....

தாண்டவர் தோட்டம் எனப்படும் இத்தலம் மருவி 'தண்டம் தோட்டம் ' என அழைக்கபடுகிறது. நர்த்தனபுரி என்பது புராண பெயர் .தேவார வைப்பு தலமும் கூட .
அன்னை சிவகாம  சுந்தரி 
தீர்த்தம் : சூரிய தீர்த்தம் , அகத்திய தீர்த்தம் 
தல விருட்ஷம்  : வன்னி 
எங்குள்ளது ?

திருநாகேஸ்வரம் அருகில் அம்மன்குடி ,முருக்கன்குடி தாண்டியதும் இத்தலம் உள்ளது.
ஒரு வைகாசி விசாக நட்சத்திர நன்நாளில் அகத்தியருக்கு ஸ்ரீ காத்யாயினி சமேத கல்யாண சுந்தர மூர்த்தியாக காட்சியளித்த தலம் .அந்நாளில் இங்கு வந்து தரிசிப்போருக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம் .

புத்திர பாக்கியம் தடைபடுதல் , திருமண தடை, கல்விச்செல்வத்தில் பின்தங்கியிருத்தல் , செல்வ வளம் குன்றுதல் , வியாபாரத்தில் மந்தநிலை போன்ற அனைத்து தடைகளும் இங்கு வந்து தரிசிப்போருக்கு படிக்கற்களாக மாறும் .
விசாக நட்சத்தன்று வழிபட வேண்டிய பரிகார தலம் 
மிகப்புராதனமான அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் ஒன்று இங்கு வழிபாடற்று உள்ளது 

இத்திருக்கோயில் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையும் மாலை 5 மணி முதல் 7.30 மணி வரையும் திறந்திருக்கும் 
திருநாகேஸ்வரத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவு ...108  வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நாச்சியார்கோயிலிருந்தும் இங்கு செல்ல சாலை வசதி உள்ளது ..

தண்டந்தோட்டத்திற்கு அருகில் உப்பிலியப்பன் கோயில் , ஐய்யாவாடி பிரத்யங்கரா தேவி திருக்கோயில் , திருநாகேஸ்வரம் அம்மன்குடி நடார் ஆகிய திருக்கோயில்கள் தரிசிக்க தக்கவை 

ஆலய தொடர்பிற்கு :
திரு நடராஜ குருக்கள் 
0435 2446019

09443070051