Monday, March 9, 2020

யார் சீரழித்தால் என்ன? நாம் சீரமைப்போம் வாருங்கள் !!!!!

ஆலயம் தொழுவது சாலவும் நன்று .....

நம் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் ஊற்றுக்கண்ணாக விளங்கும் திருக்கோயில்களை காப்பது நம் புனிதமான கடமைகளில் ஒன்று ....

அப்படி கஜா புயலின் காரணமாக 3 வருடத்திற்கு முன் நின்று போன திருப்பணி வேலைகளை மீண்டும் துவங்கியிருக்கும் ஓம்காரம் இறைபணி மன்றத்தினருக்கு உதவிட உங்களை அன்புடன் அழைக்கிறோம் ...

ஆப்பரக்குடி அமிர்தலிங்கேஸ்வர் திருக்கோயில் 

திருவாரூர் மாவட்டம் , திருத்துறைப்பூண்டி வட்டம் , கச்சனம் அருகே உள்ளது இச்சிறிய கிராமம் .மிகவும் சிதைத்து போன இத்திருக்கோயிலைபுனரமைக்க  தற்போது அன்பர்கள் பெரும்முயற்சியுடன் களமிறங்கி உள்ளனர் .

அன்பர்களே ...ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும் .

செயற்கரிய இறைப்பணியில் ஈடுபடும் அன்பர்கள் டாடாவோ , பிர்லாவோ அல்லர் ....மிக சாமானியர்கள் தான் இத்தகைய பணியில் ஈடுபட முற்படுகின்றனர் ..அவர் கரங்களுக்கு வலு சேர்க்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும் ...

தற்போது சுவாமி விமான வேலைகளும் , அம்பாள்  சன்னதி புதிதாக அமைக்கவும் மணல் , செங்கல் சிமென்ட் மற்றும் ஸ்தபதியார் சம்பளத்திற்கும் பொருளுதவி தேவைப்படுகிறது ....

ஒரு சிவாலயத்தை சீரமைப்பது என்பது ,பல ஜென்மங்களில் நாம் செய்த புண்ணிய பலன்களால் கிடைப்பது .இதனை நாம் இழந்துவிட கூடாது ...

அலைபேசி எண் தந்துள்ளேன் ...
ஓம்காரம் இறைபணி மன்றம்.. 9095265980

அழையுங்கள் ....உங்களால் இயன்றதை வழங்குங்கள் ..
இயன்றதை செய்வோம் இல்லாத ஆலயங்களுக்கு .....



இத்திருக்கோயிலின் முந்தைய நிலை 



No comments:

Post a Comment