Friday, March 13, 2020

மாங்கல்ய பலம் என்றென்றும் நிலைத்திருக்க .....

நீடித்த மாங்கல்ய பலத்திற்கும் , நிலையான திருமண நல்வாழ்விற்கும் மிகசிறந்த பரிகார தலம் நம் நாகை மாவட்டத்தில் உள்ளது .....

ஆம் அன்பர்களே திருமங்கலம் பூலோகநாயகி சமேத பூலோகநாதர் திருக்கோயில்தான் அது .

திருமங்கலம் என்ற பெயரில் ஏராளமான ஊர்கள் உள்ளன. இத்திருமங்கலம் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் குத்தாலம் வட்டத்தில் புகழ் பெற்ற திருமணஞ்சேரி அருகில் உள்ளது .

எண்ணற்ற திருத்தலங்கள் சூழ இத்தலம் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது .திருவேள்விக்குடி, திருமணஞ்சேரி ,மேலை திருமணஞ்சேரி ,குத்தாலம் போன்ற தேவார பாடல் பெற்ற தலங்களும் இதில் அடங்கும் ....

அங்கெல்லாம் செல்லும் அன்பர்கள் திருமங்கலம் பூலோகநாதரையும் தரிசித்து அருள்பெருங்கள் .

ஏனெனில் இத்தலத்தின் மகிமையும் புராதன பெருமையும் அளவிடற்கரியது .கிடைத்தறிய இத்தலத்தில் தான் குபேரன் திருமாங்கல்யத்திற்க்காக  மஹாலஷ்மியிடமிருந்து பொன் பெற்றதாக ஐதீகம் ....அருகில் அமைந்துள்ள பொன்னுர் என்னும் கிராமம் இதனை உறுதி செய்கிறது .

வேள்வி நடந்த இடம் வேள்விக்குடி ...திருமணம் நடைபெற்றது திருமணஞ்சேரி என அருகருகில் அமைந்துள்ள அனைத்து திருக்கோயில்களுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை .

கடுமையான திருமண தோஷம் உடையவர்கள் இங்கு ஒரு சிவராத்திரி தினத்தன்று வந்து முதல் ஜாமத்தில் இப்பெருமானையும் இரண்டாம் ஜாமத்தில் மாங்குடி சிவலோகநாதரையும் மூன்றாம் ஜாமத்தில் பொய்கைக்குடி நாகநாதரையும் வணங்கி பின் மறுபடியும் நான்காம் ஜாமத்தில் இப்பெருமானை வணங்கி நிறைவு செய்ய , உடன் 
திருமணம் கைகூடும் 

அதுமட்டுமல்ல அன்பர்களே, ஆயுள் விருத்தி தலமாகவும் இத்தலம் விளங்குகிறது ...இங்கு வசிஷ்டருக்கு இறைவன் காலசம்ஹார மூர்த்தியாக தரிசனம் அளித்து , இங்கு வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுள் பலத்தையும் அளிக்கிறார்.எனவே இங்கு சஷ்டியப்த பூர்த்தி , சதாபிஷேக ஹோமங்களை செய்து கொள்வது மிகுந்த நன்மையை தரும்.

மற்றுமோர் சிறப்பம்சம் இங்குள்ளது ....வேறெங்கும் காணமுடியாத வகையில் இத்தலத்தில் முருகப்பெருமான் ப்ரம்ம சாஸ்தா வடிவத்தில் வீற்றிருக்கிறார் ...சிறந்த அறிவாற்றல், நல்ல கல்வி தகுதிக்காக இவரை நாம் வழிபடலாம் ...
வசிஷ்டர் தன் மனைவி அருந்ததியோடு தம்பதி சமேதராக மிருத்யுஞ்ச ஹோமம் புரிந்த தலம் ஆகையால் இங்கு வந்து வணங்கும் பெண்கள் மாங்கல்ய பலம் கூடும் ..
காண்பதற்கரிய இத்தலத்தை அன்பர்கள்தவற விடாமல்  வாழ்வில் ஒரு முறையேனும் வணங்கி இறையருள் பெறுங்கள் .

ஆலய அர்ச்சகர் திரு மோகன் அவர்கள் 

அலைபேசி எண் :9486181657
திருப்பணிக்கு முன்னர் எடுக்கப்பட்ட புடைபடங்கள் 






1 comment: