Sunday, March 8, 2020

அண்டம் போற்றும் தண்டந்தோட்டத்து தயாபரன்.

➲அகத்தியருக்கு திருமணகாட்சி கொடுத்த இடம் .
➲முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தன் திருநடன காட்சி அருளிய தலம்.
➲தன் தந்தையின் காலிலிருந்து கழண்ட மணியை கண்டெடுத்து, பின் காலில் கட்டிவிட்டு 'மணி கட்டிய 'பிள்ளயார் எழுந்தருளியிருக்கும் தலம்.
➲திருமண தடை அகற்றும் தலம்.
➲சஷ்டியப்த பூர்த்தி , ஆயுஷ் ஹோமம் , பீமரத சாந்தி ,சதாபிஷேகம் போன்றவை இங்கு இத்தலத்தில் செய்து கொள்வதால் ஆயுள் விருத்தி கூடும் ....

தாண்டவர் தோட்டம் எனப்படும் இத்தலம் மருவி 'தண்டம் தோட்டம் ' என அழைக்கபடுகிறது. நர்த்தனபுரி என்பது புராண பெயர் .தேவார வைப்பு தலமும் கூட .
அன்னை சிவகாம  சுந்தரி 
தீர்த்தம் : சூரிய தீர்த்தம் , அகத்திய தீர்த்தம் 
தல விருட்ஷம்  : வன்னி 
எங்குள்ளது ?

திருநாகேஸ்வரம் அருகில் அம்மன்குடி ,முருக்கன்குடி தாண்டியதும் இத்தலம் உள்ளது.
ஒரு வைகாசி விசாக நட்சத்திர நன்நாளில் அகத்தியருக்கு ஸ்ரீ காத்யாயினி சமேத கல்யாண சுந்தர மூர்த்தியாக காட்சியளித்த தலம் .அந்நாளில் இங்கு வந்து தரிசிப்போருக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம் .

புத்திர பாக்கியம் தடைபடுதல் , திருமண தடை, கல்விச்செல்வத்தில் பின்தங்கியிருத்தல் , செல்வ வளம் குன்றுதல் , வியாபாரத்தில் மந்தநிலை போன்ற அனைத்து தடைகளும் இங்கு வந்து தரிசிப்போருக்கு படிக்கற்களாக மாறும் .
விசாக நட்சத்தன்று வழிபட வேண்டிய பரிகார தலம் 
மிகப்புராதனமான அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் ஒன்று இங்கு வழிபாடற்று உள்ளது 

இத்திருக்கோயில் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையும் மாலை 5 மணி முதல் 7.30 மணி வரையும் திறந்திருக்கும் 
திருநாகேஸ்வரத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவு ...108  வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நாச்சியார்கோயிலிருந்தும் இங்கு செல்ல சாலை வசதி உள்ளது ..

தண்டந்தோட்டத்திற்கு அருகில் உப்பிலியப்பன் கோயில் , ஐய்யாவாடி பிரத்யங்கரா தேவி திருக்கோயில் , திருநாகேஸ்வரம் அம்மன்குடி நடார் ஆகிய திருக்கோயில்கள் தரிசிக்க தக்கவை 

ஆலய தொடர்பிற்கு :
திரு நடராஜ குருக்கள் 
0435 2446019

09443070051



No comments:

Post a Comment