Sunday, January 27, 2019

வேதங்கள் வழிபட்ட வேதநாயகன் 

சகல தோஷங்களையும் நீக்கும் பரசுராம ஷேத்திரம் 
பித்ரு கடன்களை நிறைவேற்ற உகந்த தலம் 
மஹாலக்ஷ்மி வழிபட்ட மகத்தான தலம் 
இரும்பு சம்பந்தப்பட்ட கனரக தொழில் முனைவோர் விரும்பி வழிபட வேண்டிய தலம் 
நாயன்மார்களில் ஒருவரான ஆனாய நாயனார் அவதரித்த  ,முக்தி பெற்ற தலம் 
ஜைமினி மகரிஷி சாம வேதத்தை 1000 சாகைகளாக பிரித்து அருளிய தலம் 
சந்தர்ப்பவசத்தால் ஏழ்மை நிலை அடைந்தவர்கள் மீண்டும் இழந்த செல்வத்தை அடைய வழிபட வேண்டிய தலம் .......

அன்பர்களே இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இத்திருக்கோயிலின் பெருமையை ...

பரசுராமர் தன தாயை கொன்ற பாவம் நீங்கவும் , சண்டேசர் தன தந்தையை கொன்ற பாவம் போகவும் இங்கு வந்து சாம வேதீஸ்வரரை வழிபட்டுள்ளனர் ..

குபேரனும் இங்கு வழிபட்டுள்ளதாக தல புராணம் குறிப்பிடுகிறது ...

அன்பர்களே பெறற்கரிய இத்திருக்கோயிலை நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருநாளேனும் வணங்கி அருள்பெற வேண்டாமா..? 

வாருங்கள் திருமங்கலம் லோகநாயகி உடனுறை சாமவேதீஸ்வரர் திருக்கோயிலுக்கு ..திருச்சி மாவட்டம் , லால்குடி வட்டம் தேவார பாடல் பெற்ற மாந்துறை அருகில் உள்ளது திருமங்கலம் கிராமம் .

இத்திருக்கோயில் காலை 7 மணியிலிருந்து 11,30  மணி வரையிலும் மாலை 4.30 மணியிலிருந்து 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும் ...அலைபேசி எண்களும் தந்துள்ளேன் ..

லால்குடி யிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் உள்ளது ..சுற்றிலும் ஏராளமான தலங்கள் சூழ நடுநாயகமாக ஒரு ஆன்மீக பொக்கிஷமாக இத்திருக்கோயில் விளங்குகிறது 

அன்பர்களே கருவறையில் ஒளிபொருந்திய கம்பீரமான திருமேனி கொண்டு விளங்கும் சாமவேதீஸ்வரரை தரிசித்த மாத்திரத்தில் நம் துன்பங்கள் பறந்தோடும்...

அபய ஹஸ்த குருபகவான் , வடக்கு நோக்கிய காக வாஹனம் உடைய சனிபகவான் இத்தலத்தின் மற்றுமோர் சிறப்பாகும் ...

பித்ரு தோஷம் உடையவர்கள் இத்திருக்கோயில் வந்து வணங்க அவர்கள் பித்ரு தோஷத்திலிருந்து முழுமையாக விடுபடுவர் என்பது ஆன்றோர்கள் வாக்கு .....

குருக்கள் :பாலசுப்பிரமணிய சிவா 
98654 22027

ஞானஸ்கந்த குருக்கள் 

0431--2541040 , 97100 64571





Saturday, January 19, 2019

அண்டியவர் துயர் தீர்க்கும் அச்சுதமங்கலம் திருக்கோயில்கள் 
(இழந்ததை மீண்டும் பெரும் பரிகார தலம் )

பஞ்ச பாண்டவர்கள் தனித்தனியே ஸ்தாபித்த ஐந்து திருக்கோயில்கள் 
அவற்றுள் மூன்று மட்டுமே இன்று காண கிடைக்கிறது 
அவையும் தற்போது எவ்வாறு உள்ளது ?
இத்திருக்கோயில்களின் பெருமை என்ன?
வாருங்கள் ....தெரிந்து கொள்வோம் பெறற்கரிய இத்திருக்கோயில்களின் நிலை பற்றி ...

 புகழ்பெற்ற ஸ்ரீ வாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே , 2 கிலோமீட்டர்  தூரத்தில் குடந்தை நன்னிலம் சாலையில் உள்ளது அச்சுதமங்கலம் எனும் ஊர் ...

பஞ்ச பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் போது இத்தலத்தில் தங்கி இங்கு ஐவரும் சிவலிங்கம் அமைத்து வழிபட்டனர் என்பது வரலாறாகும் ..
பின்னர் ஆட்சி செய்த சோழ மன்னர்களால் பிரம்மாண்டமாக திருக்கோயில்கள் அமைக்கப்பட்டன  எனினும் அர்ச்சுனனை பிரதானமாக கொண்டு இவ்வூரை அர்ச்சுனன்மங்கலம் என்று அழைக்கப்பட்டது .
இன்று அச்சுதமங்கலம் என்று வழக்கில் உள்ளது .

மற்ற இரு திருக்கோயில்கள் காலப்போக்கில் முற்றிலும் அழிவுற்றதால், இக் கிராமத்தி  வெவ்வேறு இடத்தில்கிடைக்கப்பெற்ற இரு லிங்கத்திருமேனிகள் சகாதேவனாலும் , நகுலனா லும் வழிபட பெற்றவை என நம்பப்படுகிறது ..


இவை சோமநாதர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .

அச்சுதமங்கலம் கோயில்கள் 1.சோமநாதர் ஆலயம் 

அளவிலும் பரப்பிலும் பெரிய கோயில் இது .பெரிய கோயில் என்றே அழைக்கிறார்கள்.
மூற்றாம் குலோத்துங்கன் கட்டிய கோயில். மூலவர் சோமநாதர் . அம்பாள்:சௌந்தர்ய நாயகி.

வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தி, கஜ சம்ஹார மூர்த்தி சிற்பங்கள் எங்கும் காண முடியாதவை.

ஆனால்அழிவின் பிடியில் இருந்து இந்த கோவிலும் தப்பவில்லை 

பக்தர்கள் வருகை குறைவு, வருமானம் இன்மையால் அரசின் பார்வை இன்னமும் அச்சுதமங்கலம்கோயில்கள் மீது படவில்லை.
அன்பர்களே ஸ்ரீவாஞ்சியம் செல்பவர்கள் அச்சுதமங்கலம் சென்று இக்கோயில்களையும் தரிசனம் செய்துவாருங்கள்.





அச்சுதமங்கலம் கோயில்கள் 2.

தர்மேஸ்வரர் திருக்கோயில் 

அம்பாள் : தர்மேச்வரி 


அன்பர்களே திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அச்சுதமங்கலம் கிராமம், யம பயம் நீக்கும் பரிகார தலமான ஸ்ரீ வாஞ்சியத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு புண்ணிய ஷேத்திரமாகும்.

பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட பெருமையை உடையது. 3 சிவஸ்தலங்களையும் 1 பெருமாள் கோயில் உட்படபல திருகோயில்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.

அவற்றில் ஒன்று தருமர் வழிபட்ட தர்மேஸ்வரர் கோயில். மிகவும் சிதிலமைந்து உள்ளே செல்லவும் அச்சமாக உள்ளது, எங்கே இடிந்து விழுந்து விடுமோ என்று.


அம்பாளின் திருவுருவம் இன்றெல்லாம் காணலாம். அவ்வளவு அழகு







அச்சுதமங்கலம் கோயில்கள் 3.


காசி விஸ்வநாதர் கோயில்
இத்திருக்கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டு பொலிவுடன் விளங்குகிறது .
பெரிய கோவில்  அருகிலேயே இத்திருக்கோயில் உள்ளது .
விசாரித்து எளிதில் அடையலாம் ..

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அச்சுதமங்கலத்தில் எழுந்தருளியிருக்கும் காசி விஸ்வநாதரை வழிபட, வாழ்வில் இழந்ததை மீண்டும் பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.





காண்டக்ட்: R .மோகன் 9524348725
 —





அன்பர்களே பொருளை இழந்துவிட்டால் மீண்டும் பெற்று விடலாம் ..
பெறற்கரிய இத்திருக்கோயில்களை இழந்து விட்டால் ?
மீண்டும் பெற இயலாது ....
எனவே சென்று தரிசனம் செய்யுங்கள்.

இயன்றதை செய்யுங்கள் இல்லாத திருக்கோயில்களுக்கு ...