Thursday, March 12, 2020

புராதனமான இத்தலத்தை தரிசித்தால் கொரானாவும் தலைதெறித்து ஓடும் ...

முத்தான இரு திருக்கோயில்கள் ....முத்தே சிவலிங்கங்களாக மாறிய திருக்கோயில் 
அவ்வாறு தெறிக்க ஆடிய ஆலங்காடு தலத்துடன் தொடர்புடைய திருக்கோயில் ..

தூசு இல்லை ...காற்று மாசு இல்லை ....ஜன நெரிசல் இல்லை 
மாஸ்க் அணியாமல் தைரியமாக சென்று வரலாம் வாருங்கள்,
அழைத்து செல்கிறேன் ....


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருவாலங்காடு திருத்தலம் நம்மில் பலரும் அறிந்ததே ....
இங்கு இறைவன் ஆடிய இரத்தின சபை பஞ்ச சபைகளில் முதன்மையானது ....ஆனால் பலரும் அறியாதது 
இத்தலத்தை சுற்றிலும் ஏராளமான இத்தலத்துடன் தொடர்புடைய திருக்கோயில்கள் உள்ளன.
அவற்றையும் அன்பர்கள் தரிசித்து பலன் பெற வேண்டும் ...
ஒரே தலத்தையே  தரிசித்திராமல் , பழமையும் புராதன பெருமையும் ஒருங்கே கொண்டுள்ள கிராமபுரங்களில்  உள்ள இத்தகைய  திருத்தலங்களை தரிசிக்கும்போது கிடைக்கும் மன நிறைவு ,ஆத்ம திருப்த்தி வேறெதிலும் கிடைப்பதில்லை 
அன்பர்களே ....,
அத்தகைய ஒரு திருக்கோயில் தான் திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் , மப்பேடு அடுத்த முதுகூர் என்னும் திருத்தலமாகும் 

ஒன்றல்ல இரண்டு திருக்கோயில்கள் இத்தலத்தில் உள்ளன.
திருப்பணி செய்யப்பட்டு பேரழகுடன் விளங்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் .மற்றும் முத்தீஸ்வரர் திருக்கோயில் இக்கிராமத்திற்கு அழகு சேர்க்கிறது .சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வேறெங்கும் காண முடியாத0 ஓர் அதிசயம்  வைணவ புருஷர் ஸ்ரீமன் ராமானுஜருக்கு தனி சந்நிதி அமைந்திருப்பதே ...சைவ  வைணவ ஓற்றுமைக்கு இது ஒரு உதாரணமாகும் மிகுந்த ஈர்ப்புடன் இவரது சிலா ரூபம் உள்ளது ..

இத்திருக்கோயிலிருந்து சற்று தள்ளி ஊருக்கு ஒதுக்குபுறமாக முத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது .அற்புதமான பெரிய திருமேனி காண்போரை பரவசப்படுத்தும் ...சிறிய இருக்கோயில் என்றாலும் , விஸ்தரிக்க முயற்சி மேற்கொடுள்ளனர் அன்பர்கள் ..


எங்குள்ளது ?

திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லையாகும் முதுகூர் ....
பூந்தமல்லியிலிருந்து தக்கோலம் செல்லும் பேருந்துகள் மப்பேடு செல்கின்றன .அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இக்கிராமம் ....
பேரம்பாக்கம் வழியாகவும் வரலாம் ...



முத்தீஸ்வரர் திருக்கோயில் 

சுந்தரேச பெருமான் முன்பிருந்த நிலை 


No comments:

Post a Comment