Saturday, August 18, 2018

அன்பர்களே......பூர்வ ஜென்ம புண்ணியம் என்கிறார்களே அதை எளிதில் எப்படி அடைவது?

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ....என்பார் மாணிக்கவாசகர் 
அவனுடைய திருக்கோயில் திருப்பணிக்கு உதவுவதற்கும்  அவன் அருள் கண்டிப்பாக வேண்டும் ...

சிவ  திருப்பணிக்கென ஒரு செங்கல்லை வழங்கினாலே நம் பல தலைமுறையினர்இவையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து பின்  கைலாயத்தில் நித்ய வாசம் செய்யும் பேற்றினையும் பெறுவர்   என்பது திண்ணம் ....

நம் நாட்டை ஆண்ட மாமன்னர்கள் அதனாலேயே பற்பல கற்கோயில்களை கட்டினார்கள் 
அவை இன்றும் கம்பீரமாக எழுந்து நின்று அவர்களின் பெயரை உலகறிய செய்து கொண்டிருக்கின்றன ....

அப்படிப்பட்ட ஒரு பூர்வஜென்ம பாக்கியத்தை நாம் எளிதில் அடைய சந்தர்ப்பம் ஒன்று வந்துள்ளது 
அன்பர்களே பயன் படுத்தி கொள்ளுங்கள் ......

வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் வேலூர் பாளையம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பிரம்மேஸ்வர் ஆலய திருப்பணிக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் ..மிகவும் சிரமப்பட்டு திருப்பணியை நிறைவேற்றி 
உள்ளனர் எனினும் எஞ்சிய திருப்பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கு நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் கிராம மக்கள் .....

கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்து விட்ட போதிலும், குறித்த நேரத்தில் பணிகள் முடியாமல் பொருளாதார பற்றாக்குறையினால் தடைபட்டுள்ளது ..

எத்தனை சிறிய உதவியானாலும் அன்பர்களே அவை சிறு துளி பெரு வெள்ளமாக பெருகும் இறைவன் அருளால் ....

இத்தகைய அரிய திருப்பணியில் ஈடுபட்டிருக்கும் அன்பர்கள் பெரும் செல்வச்செழிப்பில் திளைப்பவர்கள் அல்லர் ..  அன்பர்களே.... அவர்கள் மிகவும் எளிய வாழ்க்கையை நடத்துபவர்கள் தாம் ...

அவர்களுக்கு உதவுவது ஒன்றே பல பிறவிகளில் நாம் சேர்த்து வைக்கப்போகும் பூர்வஜென்ம புண்ணியம் ...

அவர்களது அலைபேசி எண்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களில் உள்ளது ...அன்பர்களே அவற்றை கிளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கலாம் .






No comments:

Post a Comment