Sunday, September 9, 2018

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ......

அன்பர்களே ....
அவன் தரிசனம் பெறுவதற்கே அவன் மனது வைக்க வேண்டும் ...அப்படியென்றால் அவன் திருப்பணியில் பங்கு 
பெறுவது என்றால் பல பல ஜென்மங்களில் புண்ணியம் செய்திருக்க வேண்டுமல்லவா?

ஆன்மீக நெறியிலிருந்து சற்றும் வழுவாத நம் மாமன்னர்கள் பல்லாயிரக்கணக்கான திருக்கோயில்களையும் 
திருக்குளங்களையும் அமைத்து பராமரித்தனரே?  அவர்கள் கட்டிய அரண்மனைகள் இன்று காணப்படவில்லை
ஆனால் அவர்களால் கட்டப்பட்ட திருக்கோயில்கள் வானளாவ இன்றும் அவர்கள் பெருமையை பறைசாற்றுகின்றன அல்லவா?

அவ்வாறு அவர்களால் அரும்பாடுபட்டு உருவாக்கப்பட்ட திருக்கோயில்கள் பராமரிப்பின்றி பாழாகும்போது சிதைவுறும்போது நமக்கென்ன என்று வாளாவிருப்பது எத்தகைய அறியாமை?

நம் அறியாமை அக இருளை நீக்கி , நாம் உய்வதற்காகவே வாராது போல் வந்த மாமணியாக , அன்பர் ஒருவரது கனவில் தோன்றி தன இருப்பிடத்தை உணர்த்தி கோயில் கட்ட பணித்திருக்கிறான் இறைவன் 
என்றால்,  அன்பர்களே இந்த வாய்ப்பினை நாம் தவற விடலாமா?

வாருங்கள் போவோம் ...
வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுக்கா குருவராஜபாளையம் வழி பாக்கம் பாளையம் அஞ்சல் பாக்கம் கிராமத்தில் 1000 வருடங்களுக்கும் மேற்பட்ட திருக்கோயில் ஒன்றில் வீற்றிருக்கும் கைலாசநாதர் பெருமானே தனக்கு கோயில் அமைக்க ஆணையிட்ட பெருமான்...

கொடுத்து வைத்த பாக்கம் கிராம மக்கள் சிரமேற்கொண்டு திருப்பணிகளை ஆரம்பித்து உள்ளனர் இறைவன் திருவருள் ஒன்றையே துணையாக கொண்டு ...

அந்த சகோதரர்களுக்கு நாம் உதவாமல் யார் உதவுவார்கள் ?  அன்பர்களே...வாங்கி கணக்கு விபரங்கள் மற்றும் 
அலைபேசி எண்கள் தந்துள்ளேன் ...

அவன் திருப்பணியில் பங்கு பெற்று அவன் அருளுக்கு பாத்திரம் ஆகுங்கள் ....

தொடர்புக்கு 
சிவ குபேந்திரன் - 9345883326, 
சிவ இராமமூர்த்தி - 9025345747, 
சிவ ஹரிவசந்த் - 8695875868.


Account No.6655846738, IFSC Code:IDIB000O001,
 Indian Bank-odugathur Branch
Bank Account Name: ARULMIGU UMAMAHESWARI UDANURAI KAILAYANATHAR TEMPLE TRUST

கவனிக்க : IFSC code-ல்  மூன்றாவது சைபர் அடுத்து உள்ளது ஆங்கில எழுத்து o வாகும் ...



அஞ்சல் கணக்கு எண் : 3935204147








1 comment: