Wednesday, September 26, 2018

அன்று ....! மிக பிரம்மாண்டமான திருக்கோயில் !
இன்று.....! ஆசியாவின் மிக பெரிய கல்லறை !

ஆம்! அன்பர்களே ! எங்கே இந்த அவல நிலை? என்று தானே கேட்கிறீர்கள் ?

நம் சிங்கார சென்னையிலே தான் !

இப்படி ஒரு திருக்கோயில் இருப்பதே நம் சென்னை வாசிகள் 99% பேருக்கு தெரியாது ..மாற்று மதத்தவரின் பூத உடல்களுக்கு இங்கே அடைக்கலம் அளித்து விட்டு அடைக்கல நாதேஸ்வரர் என்ற மிக பொருத்தமான பெயருடன் இக்கல்லறையின் எதிரே அமைந்துள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் திருக்கோயிலின் உள் ஒரு சிறிய இடத்தில் அமர்ந்து, அபயம் என்று தன்னை நாடி வருபவர்களுக்கு அடைக்கலம் தந்து அருள்கிறார் அழகாம்பிகை சமேத ஸ்ரீ அடைக்கல நாதேஸ்வரர் ....

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கீழ்ப்பாக்கம் தோட்டம் சாலையில் மிகப்பெரிய கல்லறை தோட்டத்திற்கு நேர் எதிரே இத்திருக்கோயில் அமைந்துள்ளது ...

ஏன் இந்த நிலை ஏற்பட்டது?

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலத்திலேயே , இரண்டு மிக பெரிய பிரகாரங்கள் , ராஜகோபுரம் என குடியிருந்த இப்பெருமானின் திருக்கோயில் கவனிப்பாரின்றி சிதிலமடைய துவங்கியிருந்தது ... 
மிகப்பெரிய கல்லறை தோட்டம் அமைக்க இடம் தேவைப்பட்ட அந்த நேரத்தில் சிதிலமடைந்த இத்திருக்கோயில் அவர்கள் கண்ணை உறுத்தவே , வந்தது இப்பெருமானுக்கு சோதனை !!!!!

அரன் திருக்கோயில் இடிக்கப்பட்டது . மிகப்பெரிய கல்லறை தோட்டம் கட்டப்பட்டது ....

இதுவே இவரின் வரலாறு ....பின்னர் ஆன்மீக அன்பர்கள் பலரது முயற்சியால் எதிரே உள்ள தர்மராஜா கோவிலில் இவருக்கு ஒரு சிறிய தனி கோயில் அமைக்கப்பட்டது ..

அன்பர்களே இன்று கருவறையில் ஒளி பொருந்திய கம்பீரமான திருமேனியராய் திகழும் இவரை தரிசித்த மாத்திரத்திலேயே நம் துன்பங்கள் பறந்தோடி விட்ட உணர்வு மேலிடுகிறது .....

இத்திருக்கோயில் நவகிரகங்கள் தத்தம் மனைவியரை மடியில் அமர்த்தி அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கின்றனர் .

யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேண்டுமல்லவா? சென்று தரிசியுங்கள் ! இப்பெருமானின் அருளை நீங்களே உணர்வீர்கள் !!

குறிப்பு: இப்பெருமானை இரும்பு கதவின் இடைவெளியில் எப்போதும் காணலாம் 

No comments:

Post a Comment