Saturday, March 30, 2019

நலிவடைந்த திருக்கோயில்களை  வழிபடலாமா?
வானமே கூரையாக தனித்து விடப்பட்ட திருமேனிகளை வழிபடலாமா?

அன்பர்களே ....இந்த சந்தேகம் இல்லாதவர்களே இல்லை .....

அன்பர்களே ...நீங்கள் நடந்து செல்லும் வழியில் ஒரு 2000  ருபாய் தாள் ஒன்றுஅனாமத்தாககிடக்கிறது என்றுவைத்துகொள்ளுங்கள்....அவ்வளவு வேண்டாம் ஒரு 500 ருபாய் நோட்டு ...ஒரு 10 ருபாய் ..அது ஒரு ரூபாயாகவே இருந்தாலும் , நம் மனம் எவ்வளவு அலைபாய்கிறது சுற்றிலும் இருப்பவர்கள் யாரவது பார்க்கிறார்களா என்று?

நம் மனதிற்கு தெரியும் அது மதிப்பு மிக்கது என்று ..அதை குப்பையில் கிடைப்பதால் வெறும் தாள் என்று ஒருவரும் ஒதுக்குவது இல்லை ..

ஆனால் ஏன் இறைவனின் மகிமையை மட்டும் சந்தேகிக்கிறோம் ? அவர் தனித்து விடப்பட்டால் ...அவரும் நம் மதிப்பிற்கும் , வழிபாட்டிற்கும் உரியவரே ......குப்பையில் கிடைப்பதால் வைரம் கரிக்கல்லாக மாறிவிடாது ..   

இது உண்மை என்று உங்கள் மனதிற்கு பட்டால் வாருங்கள் அத்தகைய 
திருமேனிகளை சரிசெய்து , விஷ்ணுபாகம் எனப்படும் ஆவுடையார் அமைத்து , நந்தியெம்பெருமானை பிரதிஷ்டை செய்து , குறைந்த பட்ஷம் மேற்கூரை இட்டு , அப்பெருமானை வழிபாட்டிற்கு கொண்டு வர ப்ரம்ம பிரயத்தனம் செய்கிறார்கள் இம்மன்றத்தினர் ......

அன்பர்களே ...இப்பெருமான்கள் ஒன்றும் திடீரெனெ முளைத்து விடவில்லை ..பல்லாண்டு காலங்களாக பல்வேறு ரிஷிகளாலும் , மகான்களாலும் ,முனிவர்களாலும் ,தேவார மூவர்களாலும் வழிபட பெற்று பேரரசர்களால் கட்டப்பட்ட திருக்கோயில்களில் குடிகொண்டு அருளாட்சி செய்து , பின்னர் காலமாற்றங்களினாலும்  , நம் அசிரத்தையினாலும் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை  ..

நம் கடமை என்ன?

இத்தகைய அரிய செயலை செய்வோர்க்கு உதவிக்கரம் நீட்டுவது, பலருக்கும் தெரியப்படுத்துவது  நம் கடமை ...
இதனால் நாம் மட்டுமின்றி நம் சந்ததியினரும் பெரும் பலனை அடைவார்கள் ...சிவ திருப்பணிக்கென ஒரு செங்கல்லை வழங்கினாலே நம் குலம் தழைத்தோங்கும் ...வாழ்வாங்கு வாழும் ....

கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை

அலைபேசி எண்கள் 9444 352848/ 9677226260

திரு ஜெயபாலன் அலைபேசி எண் 99410 45123
இந்த எண்களில் தொடர்பு கொண்டு உங்கள் ஆதரவை தெரிவிக்கலாம் ... மேற்கூரை அற்ற பெருமான்களுக்கு திருப்பணி செய்ய உங்கள் அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் தேவை ..... மதுராந்தகம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள திருமேனிகள் உங்கள் பார்வைக்காக





விச்சூர் கிராமம் செங்கல்பட்டு ---காஞ்சிபுரம் அருகில் இவர்களது திருப்பணி .....

திருப்பணிக்கு முன்பிருந்த நிலை

முகநூல் பக்கம்

No comments:

Post a Comment