Tuesday, June 12, 2018

நலிவடைந்த திருக்கோயில்களில் வழிபாடு செய்யலாமா?
சிதைந்த திருமேனிகளை வணங்கலாமா?

பலருக்கும் இந்த சந்தேகம் உள்ளது ...அன்பர்களே ஒரு வடமொழி ஸ்லோகம் இதற்கு வழி சொல்கிறது .

சிதைந்த சிவாலயங்களை சீர்திருத்துவது , பூசை புனஸ்காரங்களுக்கு வழி வகை செய்வது , அங்கு விளக்கேற்றுவது, திருப்பணிக்கு உதவுவது , போன்றவை அஸ்வமேத  யாகம் செய்வதற்கு ஒப்பாகும் 
என்கிறது அந்த வடமொழி ஸ்லோகம் .....
அன்பர்களே நம் தாய் தந்தைக்கு , நம் நெருங்கிய உறவினருக்கு சந்தர்ப்ப வசத்தால் கை , கால்கள் உடைந்தால் , உடல் உறுப்புகள் சேதமடைந்தால் நாம் அவர்களை ஒதுக்கி விடுவோமா ?

மருத்துவம் பார்க்க மாட்டோமா?அதிக கவனம் அல்லவா எடுத்து கொள்ளவேண்டும் ?
ஒரு திருக்கோயில் சிதிலமடைய துவங்குகிறது என்றால் பல ஆண்டுகளாக கவனிப்பின்றி உள்ளது என்று தானே அர்த்தம் ....நம்மால் புறக்கணிக்கப்படுகிற அத்தகைய திருக்கோயில்களை திருமேனிகளை புனரமைப்போர்க்கு குறைந்த பட்சம் நம்மால் இயன்ற உதவிகளையாவது செய்ய வேண்டாமா?

இம்மைக்கும் மறுமைக்கும் நம்முடைய சந்ததியினருக்கும் பல தலைமுறைகளுக்கு பிறகும் நன்மை பயக்க கூடிய அரிய செயல் இதை விட வேறென்ன உள்ளது ....?  

நம்மால் சேர்த்து வைக்கப்படுகிற சொத்துக்களை விட புண்ணிய காரியங்களே நம் தலைமுறையினரை வாழ்வாங்கு வாழவைக்கும் .....

அன்பர்களே கும்மிடிப்பூண்டி பொன்னி அம்மன் கோவில் அருகே உள்ள இந்த பெருமானுக்கு ஆவுடையார் மற்றும் நந்தியெம்பெருமான் செய்யப்படவேண்டியுள்ளது ......1 டி உயரம் கொண்ட நந்தி 5000 ரூபாயும் ஆவுடையார் சுமார் 10,000 முதல் 25000 வரையும் அளவிற்கு தகுந்தவாறு ஆகிறது ...

இம்மாதிரி பல தலங்களில் இவர்கள் சேவை செய்து வருகின்றனர் ......மேற்கூரை இன்றி இருக்கும் திருமேனிகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணியும் செய்து தருகின்றனர் ..

அலைபேசி எண் குறிப்பிட்டுள்ளேன் ....

சிவ கைங்கர்யம் செய்து அவனருளை அடைய போகிறவர் யார் ? என்பதை உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன் ...

அவன் அருள் பெற்றவர்கள் தானே அவன் திருப்பணிக்கு உதவ முடியும்?
உதவ நினைப்போர் கீழ்கண்ட அடியார் பெருமக்களை அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் .


அடியார் திரு ஜெயபாலன் அவர்கள்  6382588180
அடியார் திரு வெங்கடேசன் அவர்கள் 9444352848


No comments:

Post a Comment