Tuesday, June 5, 2018

குடும்ப மகிழ்ச்சி கூட்ட குமாரபுரி (பெரியபாளையம்) வாங்க ......

செண்பகாரண்ய ஷேத்திரம் எனப்படும் ஆரணி நதியோரம் அமைந்துள்ள 10 சிவாலயங்களில் முதன்மையானகாமாக்ஷி உடனுறை பர்வதீஸ்வரர் திருக்கோயில் கொசவன்பேட்டை ..
தற்போது கொசவன்பேட்டை என வழங்கப்படும் இத்தலம் பெரியபாளையம் அருகில் ஆரணி செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ...

குமரன் பிரதானமாக கோயில் கொண்டுள்ளமையால் குமாரபுரி என்பதே மருவி கொசவன்பேட்டைஎன கூறப்படுவதாக கருத்து நிலவுகிறது .....

 மேற்கு நோக்கிய அற்புதமான திருக்கோயில் .திருப்பணி செய்யப்பட்டு புத்தம் புதிதாக விளங்குகிறது
மூலவர் சுமார் 5 அடி உயரத்தில் நீண்ட பாணம் கொண்டு தேஜோமயமாக அருட்காட்சி நல்குகிறார் பர்வதீஸ்வரர் .

அடடா என்ன அழகு...? என காண்போர் வியக்கும் அற்புத பேரழகோடு நீண்டு நெடிதுயர்ந்த, கைகளில் அங்குசம் பாசம் தாங்கி , அபயஹஸ்தங்களுடன் ,ஒரு காலை முன்னர் வைத்து பெண்களுக்குரிய நளினங்களுடன்6 அடி உயரத்தில் அன்னை காமாக்ஷி காட்சி தருகிறாள் ..வைத்த கண் வாங்காமல் அவளை உற்று நோக்குகிறோம் ..

அவள் அழகுக்கு அழகு சேர்ப்பதுபோல் அலங்கார ரூபிணியாக வெள்ளி கவசங்களுடன்  சிவாச்சாரியார் காங்கேயன் அவர்களின் கைவண்ணம் மெச்சத்தக்கது ...சுமார் 3 தலைமுறைகளாக இவர்கள் இத்திருக்கோயிலுக்கு சேவை புரிகிறார்கள் .....இவர் கிரஹம் கோயில் வளாகத்திலேயே உள்ளது ...
பலா மரம் தல விருட்சம் 


அம்பாள் வலப்புறம் அமர்ந்துள்ளதால் கல்யாண கோலம் கொண்டு தன்னை நாடி வரும் திருமணமாகாத அன்பர்களுக்கு திருமண வரம் நல்குகிறாள் ....

சிவாலயத்திற்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடைபெறுகிறது என்றாலும் திருவாதிரை நன்னாள் குறிப்பிட தகுந்தது .....அன்று காரைக்கால் மாங்கனி திருவிழாவை போலவே இங்கும் இறைவன் உலா வரும் போது அவர் மீது அன்பின் மிகுதியால் பழங்களை வீசி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர் .
அன்று ஊரே விழா கோலம் பூண்டிருக்கும் .....பெண்கள் வாசலில் கோலமிட்டு இறைவன் வருகைக்காக காத்திருப்பர்

இங்கு வந்து வழிபடுவோருக்கு திருமண தடை நீக்குவதோடு .....வாத வழக்குகளில் வெற்றி தம்பதியினரிடையே ஒற்றுமை மொத்தத்தில் இங்கு வந்து வழிபடுவோர் குடும்பத்தில் இன்னல்கள் நீங்கும் ....குறைவில்லா  மகிழ்ச்சி கூடும் ...
எனவே அன்பர்களே வாழ்வில் ஒருமுறையேனும் இத்திருக்கோயில் வந்து இறைவனையும் இறைவியையும் வணங்கி செல்லுங்கள் .....பின் அவர் பார்த்துக்கொள்வார் உங்களை .....

குருக்கள் அலைபேசி எண் :8124602646

ஆவடி ,  பெரியபாளையத்திலிருந்து பேருந்து வசதி நிறைய உள்ளது ..





2 comments:

  1. பயனுள்ள பதிவுகள். அருமை. Follow blog button காணவில்லையே? எப்படி தொடர்ந்து படிப்பது? நன்றி.

    ReplyDelete