Saturday, June 2, 2018

⧭ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டை .......
          ⧭அமைதியாய் அருளும் அரன்....... 


எப்போதும் பரபரப்பாய் இயங்கும்  ,ஆயிரக்கணக்கானோர் பணிபுரியும் அம்பத்தூர் தொழிற்பேட்டை 
ரயில்நிலையம் பட்டரவாக்கம்....

இங்கு இருக்கும் இடமே தெரியாமல் சிதைந்த நிலையில் கோயில் கொண்டுள்ளார் ஜகத் ஜனனி சமேத ஜெகதீஸ்வரர் .....

300 ஆண்டுகளுக்கும் முற்பட்டவர் .......3 ஆண்டுகளாக இவருக்கு திருக்கோயில் கட்ட முயன்று கடைக்கால் பணிகளோடு திருப்பணி நின்று  விட்டது.....

பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றாலும் தினசரி பக்தர்கள் வருகை என்பது அறவே இல்லை 
பிரதோஷத்தன்று மட்டும் மக்கள் கூடுவதாக சொல்கிறார்கள் ....

இப்பெருமான் கோயில் கொண்டதற்கான வரலாறு எதுவும் அறிந்துகொள்ள இயலவில்லை 


ஆவுடையார் பின்னப்பட்டுள்ளதால் ,பெருமானை தனியாக எடுத்து பாலாலயம் செய்துள்ளார்கள் ....

சிவாச்சாரியார் திரு முத்துக்குமரன் முகப்பேரிலிருந்து வந்து பூசை செய்து விட்டு செல்கிறார் 
அவர் அலைபேசி எண் 9444178149....

அருகில் பொன்னியம்மன் திருக்கோயில் நல்ல நிலையில் இயங்குகிறது ...பெருமாள் கோவில் ஒன்றும் இருப்பதாக கூறுகிறார்கள் ......

பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகில் இத்தலம் உள்ளது ......முதல் குறுக்கு பிரதான தெருவின் முடிவில்  அமைந்துள்ளது...

விசாரித்து செல்லலாம் ....

அஸ்பெஸ்டாஸ்  கூரையில் அருளும் இப்பெருமானை எப்போதும் தரிசனம் செய்யலாம் ..ஆனால் சற்று கூர்ந்து கவனித்தால் தான் கோயில் இருக்குமிடம் தெரிகிறது .....
கோயில் வளாகம் தொழிற்சாலை கழிவுகள் கொட்டும் இடமாக உள்ளது , வருத்தம் அளிப்பதாக உள்ளது 


அன்பர்களே ......ஜெகதீசனை தரிசனம் செய்யுங்கள் .....திருக்கோயில் நிலையை உலகறிய செய்யுங்கள் 
அரன் திருக்கோயில் முற்றுப்பெற உதவுங்கள்.......
சிவாச்சாரியார் திரு முத்துக்குமரன் 
  அலைபேசி எண் 9444178149....


No comments:

Post a Comment