Tuesday, May 29, 2018

உங்கள் கனவு இல்லம் நனவாக ......இங்கே வாங்க ...
அன்பர்களே .........

கட்டிய வீட்டை முடிக்க இயலாமல் வருந்துகிறீர்களா?
வாஸ்து குறைபாடுகளால் அல்லல் தொடர்கின்றனவா?
தேவ லோக சிற்பிகளான மயன் ,தேவ தச்சன் வணங்கி வழிபட்ட கொழுமணிவாக்கம் பாலீஸ்வர பெருமானை உளமார வணங்குங்கள் .....
சிறிய கோயிலிலே குடியிருந்து சிறப்பான பலன்களை வழங்க வல்லவர் பாலீஸ்வரர் ..
வாஸ்து குறைபாடுகளை நீக்கி அருள்பவர் ...

இத்திருக்கோயில் மாங்காடு அடுத்து குன்றத்தூர் செல்லும் சாலையில் கொழுமணிவாக்கம் பேருந்து 
நிறுத்தத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .....

 இங்கு இரு சிவாலயங்கள் உள்ளன ....
முதலில் வருவது மேற்கு நோக்கிய அரிய  சிவக்கொழுந்தீவரர் திருக்கோயில்.....இவரை முதலில் 
வணங்கி பின் சற்று தூரம் நடந்தால் பாலீஸ்வரர் திருக்கோயிலை அடையலாம் .....

கருவறையில் மிக கம்பீரமாக காண்போர் மனதை கவரும் வண்ணம் இறைவன் பாலீஸ்வரர் 
அருள் புரிகிறார் ...தெற்கு நோக்கி அன்னை அருள்கிறாள் ....இவளும் பேரழுகு பொருந்தியவள் .
உங்கள் மனக்கவலை மாற்ற வல்லவள் .....
கோயில் பூட்டியிருந்தால் எதிரில் உள்ள அன்பர் கோவிலை திறந்து தரிசனம் செய்ய உதவுவார் .

ஆனால் அன்பர்களே என் ஆதங்கம் என்னவெனில் மாங்காடு வரும் திரளான பக்தர்கள் 
இத்தகைய அரிய பொக்கிஷங்களை தரிசிக்காமலேயே திரும்பிவிடுகின்றனர் ....

இந்நிலை மாறவேண்டும் ....
அனைவரும் சிவக்கொழுந்தீஸ்வரர் , பாலீஸ்வரர் திருவருளை பெற வேண்டும் ....

இதுவே என் விருப்பம் ......






No comments:

Post a Comment