Friday, May 25, 2018

அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில்
திருமயம் - 622 507, புதுக்கோட்டை மாவட்டம்

பல்லவர் காலத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் இக்கோயிலும், இதற்கு பக்கத்தில் உள்ள பெருமாள் கோயிலும் திருமயம் மலைச் சரிவில் ஒரே கல்லில் குடைவரைக் கோயில்களாக விளங்குகிறது. இந்த சத்தியகிரீஸ்வரர் ஆலயத்தை தனியே சுற்றி வரமுடியாது. மூலவர் சன்னதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது என்பது மிகவும் சிறப்பு.


மேலும் , வழக்கத்திற்கு மாறாக , இறைவன் சன்னதிக்கு பின்புறம் அமைந்திருக்கும் லிங்கோத்பவர் சன்னதி
இங்கு மூலவருக்கு நேர் எதிரே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது . மிக பிரம்மாண்டமான லிங்கோத்பவர் உலகிலேயே இங்கு மட்டுமே அமைந்துள்ளது . 
பல்லவர் காலத்தில் சைவமும் வைணவமும் தழைத்தோங்கியதற்கு எடுத்துக்காட்டாக இத்திருக்கோயில் விளங்கிகிறது .....
1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது இத்தலம் .....
சத்திய மகரிஷி தவம் புரிந்த தலம் ..
மதுரையை போன்று இறைவனும் இறைவியும் கிழக்கு திசை நோக்கி உள்ளனர் ...

இறைவி வேணுவனேஸ்வரி ....


ஒருகாலத்தில் வேணு (மூங்கில்)வனமாக இத்தலம் விளங்கியது .....


எனவே அன்னை வேணுவனேஸ்வரி என்ற பெயரில் வணங்கப்படுகிறாள் ....மழலை பாக்கியம் இன்றி வருந்துவோர் இங்கு வந்து அன்னைக்கு தொட்டில் கட்டி நேர்ந்து கொள்கின்றனர் .....அவ்வாறு செய்வதால் விரைவில் மழலை பாக்கியம் கிட்டுகிறது ....




No comments:

Post a Comment