Wednesday, September 16, 2015

தாண்டவர் தோட்டம் கண்ட தயாபரன்--தண்டந்தோட்டம்


திருநாகேஸ்வரம் ராகு தலம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதன் அருகில் முருகன்குடி வட்டத்தில், புகழ் பெற்ற அம்மன்குடி அருகில் உள்ளது தண்டம்தோட்டம் நடன புரீஸ்வர பெருமான் திருகோயில்.

தாருகா வன முனிவர்களுக்காக நடனமாடிய தலம் இது. புகழ் பெற்ற நடராஜர் சிலை களவாடப்பட்டது ஆன்மிக உலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பு.

அப்படி ஒரு பேரழகு பெருமான் இவர்.

அள்ளி  முடிந்த சடையுடன் காணப்படும் இவரது விக்ரகம் உலக புகழ் பெற்றதாகும். பொதுவாக விரித்த சடையுடன் தான் நடராஜர் எங்கும் காணப்படுவார்.

நடனமாடிய பொது அவர் காலில் இருந்து சிதறிய மணிகளை விநாயக பெருமான் எடுத்து மீண்டும் தன தந்தையின் கால்களில் கட்டி விட்டாராம் .

இவர் மணி கட்டிய விநாயகர் என்ற பெயரில் அருகே தனியாக கோயில் கொண்டுள்ளார்.
அன்பர்களே, தவற விடாதீர்கள்!! தரிசிக்க!!

No comments:

Post a Comment