Monday, September 14, 2015

தண்ணீர் குளம் மேவிய தயாபரன் 

திருவள்ளூர் மாவட்டம் , தொழுவூர் வட்டம் ,தண்ணீர் குளம் கிராமம் .

நீர் சூழ்ந்த நெடுவயல்களால் நிரம்பப்பெற்றதால் தண்ணீர் குளம் என்று அழைக்கப்படுகிறது.

இங்கு பன்நெடுங்காலமாக வெட்டவெளியில்  பரிபாலித்து வருகிறார்  மங்களாம்பிகை சமேத ஆபத்சஹாயேஸ்வரர்.

பார்க்க பார்க்க பரவசம் ஏற்படுத்தும் கம்பீரமான திருமேனி .

தற்போது அன்பர்களால் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் திருகோயில் அமைக்க முயன்று வருகிறார்கள் அடியார் பெருமக்கள்.

அருகில் உள்ள அடியார் திரு.உதயகுமார் அவர்களின் கைவண்ணத்தில் ஜொலிஜொலிக்கும் எம்பெருமான் ஆபத்சகாயேஸ்வரர்  (படத்தில்).

தொடர்புக்கு திரு உதயகுமார் செல்:9940449903

செல்லும் வழி: ஆவடி--திருவள்ளூர்  வழித்தடத்தில் புட்லூர் என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி , வலப்புறம் 3 கிலோமீட்டர்  தூரத்தில் தண்ணீர்குளம் 
கிராமம் உள்ளது .

அன்பர்களே, ஆபத்துகளிலிருந்து நம்மை காக்கும் அம்மைஅப்பனை 
தரிசிக்க மறக்காதீர்கள் .



 

No comments:

Post a Comment