Wednesday, September 23, 2015

திருவாரூர் திருகோயில்கள்

அன்பர்களே , திருவாரூரில் பிறக்க முக்தி  என்பார்கள் ஆன்றோர்கள்.
எண்ணற்ற திருகோயில்கள் ஆரூரில் உள்ளது.பெரிய கோயில்  அனைவரும் அறிந்த ஒன்று.

அறியாத பல திருகோயில்களும் உள்ளன.அவற்றுள் ஒன்று ஸ்ரீ ருத்ரகோடீஸ்வரர் திருகோயில்.
அன்பர்களே, ருத்ரகோடீஸ்வரர் என பெயர் தாங்கிய இறைவன் அரிது.
இங்குள்ள ருத்ரகோடீஸ்வரர் திருகோயில் மகான்கள் பலராலும், முனிவர்களாலும், சித்த புருஷர்களாலும் வணங்கப்பெற்றது. 

மேலும் மயானத்திற்கு எதிரே அமைந்த தலம் இது. பன்மடங்கு சக்தி வாய்ந்ததிருகோயிலாகும். ஆனால் என்னே பரிதாபம்!!!  மிகவும்சிதிலமடைந்து திருப்பணியை துரித கதியில் மேற்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளது ஆலயம்.  

திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து கூப்பிடு தூரத்திலேயே இத்திருகோயில் அமைந்துள்ளது .காட்டு கார தெரு, சோழா திரையரங்கம் அருகில் .

சிறிது தூரத்தில் சோமேஸ்வர சுவாமி திருகோயில் உள்ளது.

மேலும் கீழ வீதியில் ,தேவார பாடல் பெற்ற தூவாய் நாதர் திருகோயிலும் 
அருகே திருநீலகண்டர் கோயிலும் உள்ளது .

படத்தில் காண்பது ருத்ரகோடீஸ்வர பெருமான் . மிக பருந்த ஆகிருதியான திருமேனி காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் .




1 comment: