Wednesday, September 30, 2015

இன்பங்களை அள்ளி அள்ளி  தரும் தலம் 


இன்பாம்பிகை உடனுறை இருள்நீக்கீஸ்வரர் திருகோயில் எறையூர் ---வல்லகோட்டை --காஞ்சிபுரம் மாவட்டம்.

புகழ்பெற்ற  வல்லகோட்டை முருகன் திருகோயில் அருகில் இருந்தும் அதிகம் அறியபடாத தலமாகவே உள்ளது இத்திருகோயில்.

பகலவன் தன் இரு மனைவியருடன் வழிபட்ட தலம்.
சிவபெருமான் சூரியனை தன் வல கண்ணாகவும் , சந்திரனை தன் இட கண்ணாகவும் ஏற்ற தலம் .
திருமணத்தடை நீக்கும் பால சந்திர விநாயகர் அருளும் தலம் .

இன்பான்பிகை இன்பத்தை அள்ளி அள்ளி தருபவள்.

இத்திருகோயில் வளாகத்தில் உள்ள புற்று மண் சகல வித நோய்களுக்கும்  அருமருந்து.

இன்னும்  சொல்லிக்கொண்டே போகலாம் இத்திருகோயிலின் மகத்துவத்தை .

இம்மாதிரி திருகோயில்களை நாம் இழப்பதால் தான் அந்நிய மதத்தினர் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகிறது.

அன்பர்களே , அவசியம் சென்று தரிசியுங்கள். பிறகு அடிக்கடி செல்வீர்கள்.
அத்தனை பேரழகு கொண்ட பிரான் இவர்.

தாம்பரம் --ஸ்ரீபெரும்புதூர் மார்க்கத்தில் எறையூர் கூட்டு ரோடிலிருந்து நான்கு
கிலோமீட்டர் தூரத்திலும் , வல்லகோட்டையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திலும் இத்திருகோயில் உள்ளது.









1 comment:

  1. Magnificent. God flashes in the universe subsidingly like the sunlight flashes into the same.

    ReplyDelete