Saturday, September 19, 2015

ஊனமுற்றோர்களை ரட்சிக்கும் கூனஞ்சேரி பெருமான் --குடந்தை 


அன்பர்களே, அஷ்ட வக்கிரன் என்னும் இளைஞனின் , தன முன்வினைபயனால்  பெற்ற எட்டு வித கூனல்களை இப்பெருமான் நீக்கி அருளியதால் இங்கு எட்டு லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டான் .

இங்கு வந்து வழிபடுவதால் , குழந்தைகளுக்கு  ஏற்படும் உடல் ஊனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்  அகலும். பாலாரிஷ்டம் எனப்படும் இளவயது மரணம் தடுக்கப்படும்.

உடல் ஊனம் மட்டுமின்றி நம் மன ஊனங்களையும் நீக்கி ,மெய்ஞானம் அருள்கிறார் இத்தல பெருமான் கைலாசநாதர் .

இங்கு அமைந்துள்ள எட்டு  லிங்கங்களையும் ஒரு சேர தரிசிப்பது , நம் பிறவி பயனாகும் .

எங்கு உள்ளது?

சுவாமி மலை அருகே, தேவார பாடல் பெற்ற திருவைகாவூர் செல்லும் வழியில் உள்ளது . குடந்தையிலிருந்து  நேரடி பேருந்து வசதி உள்ளது .

No comments:

Post a Comment