Saturday, September 5, 2015

ஆபத்துகளை களைவார் ஆபதாருண சுவாமி, 

அம்பல், நாகை 

அருள்மிகு காமாட்சி அம்மை உடனாய ஆபத்தாருண சுவாமி, அம்பல், நாகை மாவட்டம்.(சட்ட நாத சாமி கோயில் )
அன்பர்களே மிக வித்யாசமான பெயர் கொண்ட இந்த இறைவனை போல் வேறெங்கும் காண முடியுமா தெரியவில்லை.
தேவார பாடல் பெற்ற அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருகோயிலுக்கு மிக அருகிலேயே இத்தலம் உள்ளது. ஆனால் யாரும் அறிந்திருக்கவில்லை .
மிக அற்புதமான பரிகார தலம் இது. சட்டநாத பெருமான் தன் சூலாயுதத்தால் உருவாக்கிய தீர்த்தம் உள்ளது. அற்புதமான ஆற்றல் வாய்ந்த இந்த தீர்த்தம் கொடிய நோய்களையும் தீர்க்க வல்லது முக்கியமாக தொழு நோய்.
திருகோயில் மெய்காப்பாளர் திரு மோகன் அவர்கள் கோயில் அருகிலேயே உள்ளார். தரிசனம் செய்ய உதவுகிறார்.
அவர் மொபைல் எண் 9962184946
ஆனால் திருகோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில், திருப்பணியை எதிர்நோக்கியுள்ளது.
இத்தகைய அரிய திருகோயில்களை நாம் இழந்துவிட கூடாது.
அன்பர்களே குறைந்த பட்ஷம் சென்று தரிசனமாவது செய்வோம் .




No comments:

Post a Comment