Tuesday, September 1, 2015

மன குழப்பம் போக்கும் மகேசன்----முதல் 

கட்டளை-----குடந்தை 


கும்பகோணம் வட்டம் , அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை மெய்ஞான மூர்த்தி திருகோயில் , முதல் கட்டளை கிராமம் .அன்பர்களே புராண வரலாறும் , வரலாற்று சிறப்பும் உடைய இத்திருகோயில், வியாச பகவானுக்கு, இறைவன் சிவனடியார் வேடத்தில் வந்து , அவர் அஞஞானத்தை அகற்றி மெய்ஞானத்தை, வேதத்தின் பொருளை உணர்த்திய இடம் இது..

அவர் இங்கு பலகாலம் தங்கி சிவலிங்க பிரதிஷ்டை செய்து வணங்கிய மூர்த்தியே , மெய்ஞானமூர்த்தி ஆவார் .

அச்சுதப்ப நாயக்கர் திருவிடைமருதூர் திருகோயிலுக்கு நிவந்தனமாக அளிக்கப்பட கிராமம் இது .
இது அருகில் உள்ள இலந்துரை திருகோவிலில் கல்வெட்டில் காணப்படுகிறது நாயக்கர்களுக்குப்பின் வந்த மராட்டிய மன்னர்களில் ஒருவரான துளஜா என்பவர் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டு தன்
மனக்குழப்பம் நீங்கப்பெற்றார் .பல திருப்பணிகளையும் இவர் செய்துள்ளார். 

கல்வியில் பின்தங்கியவர்களும் , பெரும் மன குழப்பத்தில் சிக்கியவர்களும் இங்கு வந்து இறைவனை வழிபட்டு , பலன் பெறுகின்றனர்.

நாளைடைவில் பெரிதும் சிதைவுற்ற இத்தலம் இன்று அன்பர்களால் புனரமைக்கப்பட்டு வருகிறது.
எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடித்து , குடமுழுக்கு நடத்துவதற்கு தங்கள் மேலான ஆதரவு தேவைபடுகிறது .

திருப் பணிக்கு நன்கொடை அளிக்க விரும்பும் மெய்யன்பர்கள் கீழ்கண்ட அலைபேசி எங்களை தொடர்பு கொள்ளலாம்.


மெய்ஞான மூர்த்தி நற்பணி மன்றம் .

பி. கல்யாண சுந்தரம் (தலைவர்), முதல் கட்டளை எண் : 9489504915

ஆலய நிர்வாகி : ம. உப்பிலி , 9486406817, 9487031796
 

1 comment:

  1. Very useful information and awesome temples. Well done. Highly recommend this blog. Keep up the good work.

    ReplyDelete