Thursday, September 24, 2015

கண்ணொளி  அருளும்  கருணை  கடல் --ராமானுஜபுரம், கபிஸ்தலம் -குடந்தை 





அன்பர்களே , சூரியன், முறையற்ற தட்ஷன் செய்த யாகத்தில் கலந்து கொண்ட சாபம் தீர, தன் இரு மனைவியரான சாயா தேவி , உஷா தேவி ஆகியோர்களுடன் இத்தல இறைவனை வழிபட்டு இழந்த சோபையை  திரும்பப்பெற்றான் என்பது தல வரலாறு .

பகலவன் வழிபட்ட பரமன் அல்லவா? 

கோடி சூர்ய  பிரகாசத்துடன் கருவறையில் எம்பெருமான் விஸ்வநாதர் ,
அன்னை  அகிலாண்டேஸ்வரியுடன் வீற்றிருக்கும் அழகை காண நமக்கு கண் கோடி வேண்டும்.

இப்பெருமானை வழிபடுவதால் , கண் பார்வை தீட்சண்யம்  பெரும்.
வெப்ப சம்பந்தமான நோய்கள் தீரும்.

முன்னர் செய்த பாவங்கள் விலகும்.

எங்கே உள்ளது?

குடந்தை--திருவையாறு பிரதான சாலையில் உள்ளது ராமானுஜபுரம் .

1 comment:

  1. Thaayumaanavar and Vallalaar call the God without image.

    ReplyDelete