Friday, September 11, 2015


குபேரன் அருள்பெற செல்லுங்கள் சென்னிமங்கலம்--லால்குடி 



திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் சென்னிமங்கலம் கிராமத்தில் பேரளவினராய் , மரகத திருமேனியராய் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சுந்தரேச்வர பெருமானை , தல விருட்ஷமான வில்வமரத்தை வலம் வந்து வழிபட,
குபேரனின் அருட் கடாட்சம் கிட்டும்.

இதற்கு காரணம் , ஸ்ரீ சிவபெருமான் குபேரனுக்கு அருளிய பொன் வில்வசாரம் இவ்வாலயத்தில் பன் மடங்கு பல்கி பெருகி அற்புதம் அளித்ததே ஆகும்.

பௌர்ணமியன்று திருவண்ணாமலை அருணாச்சலேச்வரை வலம் வந்தபின்,
பக்தர்கள் இவ்வாலயம் வந்து  ஸ்ரீ சுந்தரேஸ்வரரை வழிபடுதல் மரபாக இருந்து வந்தது .

இறைவி மீனாக்ஷி கால்களில் பெருவிரலில் மெட்டி அணிந்துள்ளது சிறப்பாகும் 

பசுமை நிறைந்த வயல்கள் தோப்புகளுக்கு நடுவே ஆலயம் அமைந்துள்ளது.
மார்ச் கடைசி வாரம் முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை சுமார் சுமார் பதினைந்து  தினங்களுக்கு சூரியனின் கதிர்கள் நேராக இறைவன் மீது படும்போது கரும்பச்சை நிறத்தில் இறைவன் ஜொலிஜொலிப்பது கண் கொள்ளா காட்சியாகும் 

தற்போது இத்திருகோயில் திருப்பணி நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது

ஆலய அர்ச்சகர் திரு கணேச குருக்கள் ,
                                   கீழ வீதி , லால்குடி
                                     9786189093


No comments:

Post a Comment