Tuesday, September 22, 2015

ஆலங்குடி(குத்தாலம் வட்டம்) பெருமானை காண கண் ஆயிரம் வேண்டும் ..


அன்பர்களே ,வானளாவிய கோபுரங்கள் இல்லை.கொடிமரம் இல்லை,நீண்ட பிரகாரங்கள் இல்லை. இவ்வளவு ஏன்? நித்திய பூசைகள் , ஆராதனைகள்  இல்லை .விளக்கேற்றவும் வழியில்லை..

  ஆயினும் அன்பர்களே, சாநித்யம் சிறிதளவும் குறையாத ஐந்தரை அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் எம்பெருமானை காண உங்களுக்கு ஆவலா? 

இவர் இருப்பது ஆலங்குடி கிராமம். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம், குத்தாலம் --பந்தனல்லூர் பேருந்து பாதையில் , நான்கு கிலோமீட்டர் தூரத்தில் ,ஒரு ஓலை வேய்ந்த குடிசையில் குடிகொண்டுள்ளார் இப்பெருமான் .

இப்பெருமானின் திருபெயரோ , மற்றும் தல விளக்கங்களோ பெற முடியவில்லை .யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டவர் என்பதை அறியமுடிகிறது. அருகில்  மிக சிதிலமடைந்த பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது.

அருகில் மக்கள் குடியிருப்பு பகுதி இருந்தாலும், யாரும் சென்று விளகேற்ற கூட முயற்சிக்கவில்லை. அன்பர்களே இது தான் மிகுந்த மனவருத்தத்தை தருகிறது.

எத்தனையோ பொருட்செலவில்  எத்தனையோ தூரத்தில் இருக்கும் திருகோயில்களுக்கு நாம் செல்கிறோம். அன்பர்களே நம் அருகில் இருக்கும் இந்த நிலையில் உள்ள திருகோயில்களை திரும்பியும் பார்ப்பதில்லை நாம் .

இச்செயல் பெற்ற தாயை பட்டினி போட்டுவிட்டு , அயலூரில் அன்னதானம் செய்வதை போன்று உள்ளது.


No comments:

Post a Comment