Thursday, September 3, 2015

கொங்கு நாட்டின் திருவண்ணாமலை--மரப்பாலம்---
மதுக்கரை --கோவை 

பஞ்ச பாண்டவர்களில் தருமர் வழிபட்ட தருமலிங்கேஸ்வரர் ஆலயம்.அற்புதமான இந்த சிவாலயம் கோவை-பாலக்காடு சாலையில் மதுக்கரை அருகில் ஒரு மலையின் மீது  அமைத்துள்ளது. ஒவ்வொரு பௌரமியன்றும் இங்கு ஏராளமான பக்தர்கள்  கிரிவலம் செய்கிறார்கள்.
அஷ்ட லிங்கங்கள் சந்நிதியும் உண்டு.
ஆலயத்தை அடைய 800 படிகளை கடந்து செல்ல வேண்டும்.
சிரமமான பயணம் தான். ஆனால் தினசரி சூரிய பூசை நடைபெறும் சிறப்பான சிவாலயம் இது.
இங்கு அம்பாளுக்கு சந்நதி இல்லை என்பது குறிப்பிட தக்கது. தடை செய்யப்பட வணபகுதி என்பதால் இங்கு இரவு 6.00 மணிக்கு மேல் தரிசனம் கிடையாது.
இயற்கை எழில் சூழ்ந்த இந்த சிவாலயத்தை வாழ்வில் அனைவரும் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும்.


No comments:

Post a Comment