Wednesday, September 23, 2015

சென்னையில் ஒரு ராமேஸ்வரம் --போரூர் 

இங்கிருந்து போருக்கு புறப்பட்டதால் இத்தலம் போரூர் ஆனது.

புறப்பட்டது யார்? ஸ்ரீ ராமபிரான் தான்.இலங்கைக்கு போருக்கு
புறப்படும் முன் தன நித்ய வழக்கப்படி சிவபூசை செய்ய அவர் தவறவில்லை.
இங்கு ராமபிரானுக்கு சிவபெருமான் குருவாக இருந்து வழிகாட்டியபடியால்
இது குருஸ்தலமாக போற்றப்படுகிறது .

ராமருக்கு மட்டுமல்ல!!! நம் வாழ்க்கைக்கும் வழிகாட்டி, இங்கு உறையும் ஸ்ரீ ராமநாத சுவாமியும் , அன்னை பர்வதவர்த்தினியும் தான்.

இறைவனது கம்பீரமான திருமேனி நம் கண்ணை விட்டு அகலாது. கொள்ளை  அழகு .

எங்கே உள்ளது ?

போரூர் முருகன் கோயில்  என்றால் சிறு குழந்தையும் வழிகாட்டும் .
அதே தெருவில் தான் இத்திருகோயிலும்  அமைந்துள்ளது.

அன்பர்களே ஒன்றை மறந்துவிடாதீர்கள் !! ஹனுமான் வழிபட்ட ஹனுமந்தலி ங்கேஸ்வரரும் , இரண்டு தெருக்கள் தள்ளி  அருள்பாலிக்கிறார் .விசாரித்துக்கொண்டு சென்று தரிசனம் செய்யவும்.



1 comment: