Thursday, April 21, 2016

உருக்குலைந்த  நிலையில் உமையொருபாகன் திருகோயில் ---அசூர் -குடந்தை 

அன்பர்களே ......,

குடந்தையிலிருந்து  மூன்று  கிலோமீட்டர் தூரத்தில் நீலத்த நல்லூர் சாலையில் உள்ளது  அசூர் ....
குளங்கள் , நெல் வயல்கள்  நிறைந்த அழகிய  சிற்றூர் ...இங்குள்ள சிதைந்த ,திருகோயில் ஒன்றில் ,இறைவன்  தான்தோன்றீஸ்வரர்  என பெயர்  கொண்டு,  கருவறையில்,நீண்ட  பாணத்துடன் விளங்குகிறார் ..

அம்பாள்  சுமார் 5 அடி  உயரத்துடன்  கம்பீரமாக விளங்குகிறாள் ...
இது  தவிர  பெரிய  லிங்கத்திருமேனி ஒன்று  கோவிலின்  வெளியே காணப்படுகிறது ...
தக்ஷிணாமூர்த்தி சிலை திருடப்பட்டு , மிகுந்த சிரமத்திற்கிடையில் மீண்டும் பெறப்பட்டுள்ளது ...

கோவிலின்  முன்பாக  பெரிய  குளம் உள்ளது ....
மிகவும்  உருக்குலைந்த  நிலையில்  இத்திருக்கோயில் காணப்படுகிறது .
மகாமகத்திற்காக குடந்தை அருகே உள்ள பல கோயில்கள் சீரமைக்கப்பட்டன ...ஆனால்  என்ன காரணத்தினாலோ இத்திரு கோயில் கண்டுகொள்ளப்படவேயில்லை. கோயில் சொத்துக்கள் இருந்தும் அவை ஆக்கிரமிப்பில் உள்ளது ....

அருகில்  ஓய்வு பெற்ற  ஆசிரியர் திரு .ரவி  அவர்களை தொடர்பு கொண்டு விட்டு , நீங்கள்  சென்று  தரிசிக்கலாம் .....
அவர் தொலைபேசி எண் : 0435--2443897

2 comments:

  1. "சித்தமெல்லாம் சிவ மயமே ... " எனப் பாடிக்கொண்டிருக்கிறேன் தலபுராணம் ஒவ்வொன்றையும் காண்கையில், ... அருமை அருமையோ அருமை !!!!! பதிவிட்டது கண்டு ஆனந்தம் :) இதைக் கண்ணாறக் கண்டது அதைவிடப் பேரானந்தம் !!!!! ஓம் சிவாய நம!!!!!

    ReplyDelete