Sunday, April 3, 2016

அண்டியவர்களுக்கு  உணவளித்த  ஆண்டார்பந்தி கிராமம் 

 திருவீழி மிழலையின் வரலாறோடு  தொடர்புடையது  ஆண்டார்பந்தி வரலாறு. 
அப்பர் பெருமான்  திருவீழிமிழலை வந்த  அடியார்களுக்கு இங்கே  விருந்து அளித்ததால் இப்பெயர்  பெற்றது ...

சமையல்  செய்பவர்கள்  நிறைந்த ஊர் ....

இங்குள்ள இறைவன் உலா திருமேனி கையில் தராசும், அம்பிகை கையில் படியும் கொண்டு விளங்குகிறது. தற்போது பழம் பெருமைகள் மட்டுமே எஞ்சி நிற்க, கோயில் நடமாட்டமே இல்லாமல் புறாக்களின் உரையாடல்களை  மட்டும் கேட்ட வண்ணம் அமர்ந்திருக்கின்றார் இறைவன்.
பக்தர்கள்  வருகை  அறவே இல்லை ..
இறைவன்-கைலாசநாதர் 
இறைவி- காமாட்சி 


எங்கே  உள்ளது ?

திருவாரூர் மாவட்டம் , நன்னிலம்  வட்டம்......பூந்தோட்டம்  செல்லும்  சாலையில்  உள்ளது  ஆண்டார்பந்தி .....பிரதான  சாலையிலிருந்து இடது புரம் ஒரு  கிலோ  மீட்டர் 
பயணிக்க  வேண்டும் ...

அருகே உள்ள ஒரு  வீட்டில்  கோவில்  சாவி  உள்ளது .....தரிசனம் செய்ய  உதவுவார்கள் ..


No comments:

Post a Comment