Saturday, April 9, 2016

தேவர்களுக்கருளிய  தண்டந்தோட்டத்து  தாண்டவன் 

இறைவன்  தன அடியார்களுக்காகவும் தேவர்களுக்காகவும்  இங்கே  நடன காட்சி  நல்கியதால்  இவ்வூருக்கு  தாண்டவர் தோட்டம் என் பெயர் வழங் கலாயிற்று ...தற்போது  மருவி தண்டம்தோட்டம் எனப்படுகிறது ...
அம்மன்குடி  அருகே ...முருக்கன்குடி வட்டம் ....
அவ்வாறு  ஆடியபோது  அவர் கால் சலங்கை  மணிகள் சிதறியது....அதனை  விநாயக பெருமான் சேகரித்து மறுபடியும்  தன தந்தை  காலில்  கட்டி விடுகிறார்..
இதனால்  இங்குள்ள  விநாயகருக்கு மணிகட்டிய விநாயகர்  என்ற பெயர் ..தனி கோயில் கொண்டு அருளுகிறார் அவர்..
அன்பர்களே....பொதுவாக  விரித்த சடையுடன் காணப்படும்  நம் நடராஜ  பெருமான்   இங்கே  அள்ளி முடித்த  அழகிய  கோலத்துடன் காணப்படுகிறார்..
இது மிகவும் அரிய காட்சி ...

ஆனால்  அன்பர்களே, நாம் கொடுத்து வைக்கவில்லை ...ஆம் .....அந்த அற்புத சிலை  வெளி நாட்டிற்கு கடத்தப்பட்டு விட்டது ......
மேலும்  அகத்தியருக்கு  இங்கே இறைவன் காட்சி அளித்துள்ளார்..அவர் அகஸ்தீஸ்வரர்  என்ற பெயரில்  தனி கோயில்  ஒன்றில் அருள்கிறார் ..
இறைவன் நடன புரீஸ் வர் காண்போர்  மயங்கும்  அற்புத அழகிய  திருமேனி
சுமார் ஆறடி  உயரம்  கொண்டவர்....கண்  இமையாது  பார்க்கலாம் .....

அருகில்  நடார் , அம்மன்குடி , அய்யாவாடி  போன்ற  தன்னிகரற்ற தலங்கள் உள்ளன.  திருநாகேஸ்வரம் அருகில்  தான்  இத்தலமும்  உள்ளது ...

முருக்கன்குடி  வட்டம் ....குடந்தையிலிருந்து  பேருந்து வசதி உண்டு ....

இத்தனை  பெருமைகள் இருந்தாலும் ...அன்பர்களே நம்மிடம் உள்ள குறை  என்னவென்றால்  நாம்  இருக்கும் இடத்தில் உள்ள ஆலயங்களை  நாம்  பொருட்படுத்துவதேயில்லை ....
அயலூருக்கு  சென்று  அதிக பொருட்செலவில்  வரிசையில்  வெகுநேரம்  நின்று கால் கடுக்க தரிசனம்  செய்வோம் .....
ஆனால் பெறற்கரிய  இத்தகைய  திருகோயில்கள்  நம் கண்ணிற்கு புலப்படவே படாது ...

அன்பர்களே  எதற்கும்  கொடுப்பினை  வேண்டும் ...கொடுத்து வைத்தவர்கள்
மட்டுமே  இத்திருகோயிலில் காலை  எடுத்து  வைக்க முடியும் .....

எனவே  அன்பர்களே  கொடுத்து  வைத்தவர்கள்  செல்லுங்கள் .......


No comments:

Post a Comment