Friday, April 15, 2016

பழியஞ்சிய  நல்லூர்  பெருமானுக்கு வழி பிறந்து விட்டது

குடந்தை -காரைக்கால்  வழித்தடத்தில்  குட்டகரை  என்னும் இடத்தில் இறங்கி வைகல்  மாட கோயில்(தேவார பாடல் பெற்ற தலம் )  செல்லும் வழியில் இத்தலத்தை அடையலாம் ....

இங்கு பலகாலம் சிதிலமடைந்த  ஒரு திருகோயிலில் அருள்பாலித்து வந்தார் சொர்ணாம்பிகை  சமேத ரத்னபுரீஸ்வர  பெருமான் ...

நான்கு வருடங்களாக  திருப்பணி தொடங்கப்பட்டு என்ன காரணத்தினாலோ அது பாதியில்  நின்று விட்டது .....
இக்கோவிலில் குடிகொண்டுள்ள பெருமான்  காண்போர் மயங்கும் வசீகர திருமேனி உடையவர் .
ஒருமுறை  பார்த்தால்  நீங்கள்  பலமுறை வருவீர்கள் என்பது உறுதி .

இந்நிலையில்  தற்போது  பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணி முழு வீச்சில் நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது ...
இது மிகவும் மகிழ்க்சி தர  தக்க  செய்தியாகும் ....
இனி  அவன் அருளாலே திருப்பணி முற்றுபெற்று குடமுழுக்கு  இனிதே நிறைவேறும் நன்னாள்  வெகுதூரத்தில்  இல்லை ...



No comments:

Post a Comment