Saturday, April 23, 2016

அல்லல்  படுத்தும்  நோய்களுக்கு  மாமருந்து..

வல்வினைகளுக்கு அருமருந்து ......
போகா துயரங்களுக்கு நல்மருந்து ......
நம்  படூர்  மணிகண்டேஸ்வர பெருமான் , அன்னை மரகதவல்லி .....கோயில் கொண்டுள்ள திருகோயில் தான்  அது ...

எங்குள்ளது ?
காஞ்சிபுரம்  மாவட்டம் , திருபோரூர் வட்டம் , கேளம்பாக்கம் அருகில் உள்ளது படூர் கிராமம் ...
பிரதான சாலையிலிருந்து சற்று தள்ளி அமைந்துள்ளது திருகோயில் ,
சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக .....
பெருமாள் கோயில்  முற்றுபெற்றுவிட்டது ...மணிகண்டேச்வர பெருமான் கோயில் திருப்பணி  நடைபெற்று வருகிறது ....
நிதி  பற்றாக்குறை  உள்ளது ....எனவே ...

அன்பர்களே,  நீங்களும்  இத்திருப்பணியில் பங்கு கொள்ள  வாருங்கள் ...
கருவறையில்  அற்புதமாக  கம்பீரமாக இறைவன்   குடி கொண்டிருக்கும்  அழகை காண வாருங்கள்..
அன்னையின்  அழகில் மெய்மறந்து விடுவீர்கள் ...அத்தனை  அழகு அவள்...
பெருமாளும்  அப்படியே .....நல்ல கம்பீரம் ....புகைப்படங்கள் தந்துள்ளேன் 
நீங்கள்  தொடர்பு கொள்ள  அலைபேசி எண்ணும் தந்துள்ளேன் ...
இன்னும்  என்ன யோசனை .....உடனே கிளம்புங்கள் ....மணிகண்டேஸ்வரர்  காத்துள்ளார் .......

தொடர்புக்கு :   திரு  பாலாஜி  , 988 4726014







No comments:

Post a Comment