Friday, April 29, 2016

எண்கண்  பிரம்மபுரீஸ்வர பெருமான் 

பிரணவத்தின் பொருள் தெரியாததால் முருகனின் சீற்றத்திற்கு உள்ளான பிரம்மன் தன பதவியை இழந்து, இத்தலத்திற்கு வந்து இங்கு உறையும் பிரம்மபுரீஸ்வரரை தன  எட்டு கண்களை பெயர்த்து எடுத்து மலர்களாக இறைவனுக்கு அர்பணித்து வழிபட்டான் ....

தன்  இழந்த பதவியை அடைந்தான் என்பது தல வரலாறு .....
இதனால் தான் எட்டு கண்கள் என பொருள் படும் எண்கண் என இத்தலம் வழங்கபடலாயிற்று.....

ஆனால் இங்கு  முருகனே பிரதான தெய்வமாக  விளங்குகிறார் ...
ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்த  கோலம் ...மிக அற்புதமாக வடிக்கப்படிருக்கும் இந்த சிலை முழுதும் மயிலின் இரண்டு கால்கள் மட்டுமே தாங்கி பிடித்திருக்கும்  வகையில் செதுக்கப்பட்டுள்ளது ...

அன்பர்களே  மிகப்பெரிய  கற்றளியான இத்திருகோயில் குடந்தை திருவாரூர் மார்க்கத்தில் சிமிழி அடுத்து உள்ளது ....
பிரதான சாலையிலிருந்து மூன்று  கிலோமீட்டர்  பயணிக்க வேண்டும் 
பேருந்து  வசதி குறைவு ஆதலால் பக்தர்கள் தங்கள் சொந்த  வாகனங்களில் வருவது நல்லது ....
வாழ்வில் ஒருமுறையேனும் இத்தலத்தை தரிசிக்க வேண்டும் ....அன்பர்களே...அத்தனை அற்புதமான , மிக புராதனமான திருகோயில் இது ....

இது தவிர  இங்கு மற்றொரு பிரம்மபுரீஸ்வரர் திருகோயில் மிக சிதிலமடைந்த  நிலையில் உள்ளதாக  அர்ச்சகர் தெரிவித்தார் ...
இரவாகிவிட்டபடியால் என்னால்  தரிசிக்க இயலவில்லை ....



No comments:

Post a Comment